ஹோசிமின் சிட்டி, டிச.23- 2022-ஆம் ஆண்டில் 14 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்டுகள் ரத்தத்தை தன்னார் வலர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் சேகரித்து வியட்நாம் சேகரித்துள்ளது. அவசர காலத்திலும், பல்வேறு வகை யான சிகிச்சைகளுக்காகவும் ரத்தம் பெரு மளவில் தேவைப்படும் நிலை வியட்நா மில் இருந்து வந்தது. ரத்தம் கிடைக்கா ததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் சிகிச்சைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்த அரசு, குருதிக் கொடைக்கான தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க முடிவு செய்தது. நாடு முழுவதும் ஏராளமானோர் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து, கொடை தர முன்வந்தனர். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த முயற்சியில் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டது. குருதிக் கொடைக் கான தேசியக்குழுவுக்கு முழு ஆதரவைத் தந்ததோடு, தன்னார்வலர்களைத் திரட்டு வதில் பெரும் பங்காற்றியது.
அனைத்து மட்டங்களிலும் தொண்டர்கள் இந்த முயற்சியில் இணைந்தனர். 2022-ஆம் ஆண்டில் 14 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்டு கள் இவர்கள் மூலம் பெறப்பட்டது. நிர்ணயித்த இலக்கில் 106 விழுக்காட்டை எட்டி சாதனை படைத்திருக்கிறார்கள். அனைத்து வகையான வழிகளையும் பயன்படுத்தி மக்களிடம் குருதிக் கொடை பற்றிய விபரங்களைக் கொண்டு சேர்த் திருக்கிறார்கள். அடுத்த ஆண்டுக்கு 14 லட்சத்து 70 ஆயிரம் யூனிட்டுகளை தன்னார் வலர்கள் மூலமாகத் திரட்ட இலக்கு நிர்ண யித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி இந்த இலக்கை எட்டுவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது. இந்தப் பணியில் எழும் சிரமங்கள் குறித்து கூட்ட மொன்றை வியட்நாம் அரசு ஏற்பாடு செய்து விவாதித்துள்ளது. அவற்றைக் களைவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன.