கெய்ரோ. ஏராளமான நம்பிக்கைகளுக்கும் சவால்களுக்கும் இடையில் காப்27 கால நிலை உச்சிமாநாடு கெய்ரோ செங்கடல் சுற்றுலா நக ரான ஷெர்ம் எல்-ஷேக் நகரில் நவம்பர் 6இல் தொடங்கி யுள்ளது. ஐநாவின் தலைமையில் நடைபெறும் 27ஆவது காலநிலை உச்சி மாநாடு இது. ஒருபுறம் எண்ணெய் விலையுயர்வு. மறுபுறம் காலநிலை மாற்றத் தையும், கார்பன் உமிழ்வையும் குறைக்க அதற்கு முக்கி யக் காரணமாக இருக்கும் பணக்காரநாடுகள் முயல்வ தில்லை என்ற ஏழை நாடுகளின் குற்றச்சாட்டு. 2021இல் க்ளாஸ்கோ நகரில் நடந்த காப்26 உச்சி மாநாட்டில் சுழிநிலை (ஜூரோ) கார்பன் உமிழ்வு, வனப் பாதுகாப்பு, காலநிலையால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் சேதம் மற்றும் இழப்பிற்கான நஷ்ட ஈடு தொடர் பான ஏராளமான தீர்மானங்களை அதில் கலந்து கொண்ட 193 நாடுகள் எடுத்தன. ஆனால் இதில் 23 நாடுகள் மட்டுமே ஐநாவிற்கு இந்த இலட்சியங்களை அடைவதற்கான தங்கள் திட்டங்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
நிதியுதவி
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு அதிகரிப்ப தன் மூலம் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களுக்குக் காரணம் பணக்கார நாடுகளே என்று குற்றம் சாட்டி அதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீண்டகால மாக வளரும் நாடுகள் கோரிவருகின்றன. இந்த அம்சம் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி நிரலில்/அஜெண்டாவில் உட்படுத்தப்படவில்லை. என்றாலும் இதுவும் மாநாட்டில் விவாதத்திற்காக எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நிதி, அறிவியல், பாலின சமத்துவம், நீர், ஆற்றல், உயிர்ப் பன்மயத்தன்மை போன்றவை, இதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியவையே இந்த ஆண்டிற்கான உச்சிமாநாட்டின் முக்கியக் குறிக்கோள்.
இந்த மாநாடு நவம்பர் 18இல் நிறைவுபெறுகிறது. உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஷெர்ம் எல்-ஷேக் நகரம் பசுமை நகரமாக மாற்றப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்குகள், உணவகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றிற்கான ஆற்றல் புதுப்பிக் கக்கூடிய ஆற்றல் உற்பத்தி செய்யும் நிலையங்களில் இருந்தே பெறப்படுகிறது. பசுமைச் சுற்றுலா போன்ற நீடித்த நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது பசுமை நகரமாக மாறியுள்ள ஷெர்ம் எல்-ஷேக் நகரம் போல பூமியும் பச்சையாடை அணியுமா? காலநிலை சீராகி உலகில் உயிரினங்கள் அனைத்தும் நலமாக வழும் நாள் வருமா? நல்ல முடிவிற்காக மனிதகுலம் காத்தி ருக்கிறது.