ஹவுதிகள் மீது தாக்குதல்
ஏமன் ஹவுதி குழுவின் மீது அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல் நடத்தியுள் ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் நீர் மூழ்கி மற்றும் போர்க் கப்பல்கள் ஹவுதியின் ராணுவ விமான தளம்,ராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான தாக்குதலை நடத்தி யுள்ளன. இதை தொடர்ந்து பாலஸ்தீனர்களின் இனப் படுகொலைக்கு ஆதரவான மற்றும் அடக்கு முறைக்கு ஆதரவான நாடு கள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஹவுதி எச்சரித்துள்ளது.
காசாவில் 1000 குழந்தைகளின் கால் துண்டிப்பு
காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் அல்லது 1 சதவீதமான குழந்தைகள் கொலைசெய்யப்பட்டு அழிக் கப்பட்டுள்ளனர்.மேலும் 1000 குழந்தைகள் குறைந்தபட்சம் 1 அல்லது 2 கால்களை இழந் துள்ளனர்.நாள்தோறும் 10 குழந்தைகள் தங்களது கால்களை இழந்து வருகின்றனர். எந்த மயக்க மருந்தும் இன்றி இவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் சூழல் உள்ளது என காசாவில் உள்ள தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த ஜேசன் லீ என்பவர் தெரிவித்துள்ளார்.
உலக தலைவர்களால் மனித உரிமை கேள்விக்குறி
மனித உரிமைகள் கண்காணிப்ப கத்தின் (HRW) ஆண்டு அறிக்கை யின்படி, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவ தற்கான தங்கள் கடமைகளை உலக நாடுகளின் தலைவர்கள் புறக்கணிப்பதால், உலகம் முழுவதும் மனித உரிமைகள் மோசமான நிலையில் உள்ளன என தெரிய வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் போர்க்கால மனித உரிமை மீறல்கள், மனித உரிமைகளை அரசாங்கங்கள் தகர்ப்பது குறித்து அந்த அறிக்கை கடுமையாக எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா திருடிய கப்பலை மீட்ட ஈரான்
ஒரு வருடத்துக்கு முன் ஈரான் மீது பொருளாதாரத் தடை உள்ளது என ஈரான் நாட்டின் செயின்ட் நிக்கோலஸ் என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா திருடி சென்றது. அக்கப்பலையும் எண்ணெய்யையும் அமெ ரிக்கா வணிக லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டது.அக்கப்பலை தற்போது 1 மில்லி யன் பீப்பாய் எண்ணெயுடன் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மீட்டுள் ளது.இராக்கின் பாஸ்ரா துறைமுகத்திலிருந்து துருக்கி பயணித்தபோது இந்த கப்பலை கைப் பற்றியுள்ளனர்.
அர்ஜெண்டினா பணவீக்கம் 211.4 சதவீதம்
ஜனவரி 11 அன்று அர்ஜெண்டினா தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளி யிட்ட உள்நாட்டுப் பொருளாதார நிலைமை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவின் மாதாந்திர பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதம் 25.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 211.4 சதவீதமாக இருந்துள்ளது என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.