world

img

இனப்படுகொலைக்கு எதிராக கோஷமிட்டபடி அமெரிக்க வீரர் தீக்குளிப்பு

இனப்படுகொலையை எதிர்த்து    அமெரிக்க வீரர் தீக்குளிப்பு

பாலஸ்தீனர் இனப்படுகொலை க்கு எதிராக கோஷமிட்டபடி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக் குளித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் அமெரிக்க விமானப்படை வீரர் பாலஸ் தீனத்திற்கு ஆதரவாக “பாலஸ்தீனத்தை விடு வியுங்கள்” என கோஷமிட்டும் பாலஸ்தீனர் களை இனப்படுகொலை செய்ய நான் ஒத்து ழைக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டும் தீக்குளித்துள்ளார்.

போரில் 31 ஆயிரம் வீரர்கள் உயிரிழப்பு : உக்ரைன் 

உக்ரைன் - ரஷ்யா போரில் 31 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித் துள்ளார். போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் உக்ரைன் தரப்பில் இருந்து முதல் முறையாக வீரர்களின் பலி எண்ணிக்கை பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு நாடுகளிடம் ஆயுத பற்றாக்குறையை கூறி அதிகளவு ஆயு தங்களை ஜெலன்ஸ்கி கோரியுள்ளார். 

உக்ரைன், நேட்டோவிற்கு  புடின் எச்சரிக்கை

உக்ரைன் மற்றும் நேட்டோவிற்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோவில் உக்ரைன் இணைவதும் அதன் மூலம் கிரிமியாவை ஆக்கிரமிக்க நினைப்ப தும்  ஐரோப்பிய நாடுகளை ரஷ்யாவுடனான போருக்கு இழுக்கும் செயல், அது அணு ஆயுதப் போரை உருவாக்கும் என்று  புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா அதிநவீன தொழில் நுட்பத்திலும் முன்னணி அணுசக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டு மென தெரிவித்துள்ளார். 

போராடும் மருத்துவர்களுக்கு  தென் கொரிய அரசு மிரட்டல் 

தென் கொரியா அரசு வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான்கு நாட்களுக்குள் பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளது. இல்லை என்றால் அவர் கள் மீது வழக்கு பதிவு செய்து மருத்துவ உரி மங்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத் துள்ளது. பணிச் சூழல், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்த நடவடிக்கை எடுக்கா மல் மருத்துவ மாணவர்களுக்கான இடங்களை மட்டும் அதிகரிப்பதில் எந்த பயனும் இல்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஊதியம் கேட்டு  ஈரானில் போராட்டம் 

பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க ஈரானில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். ஈரான் தொழிலாளர்கள் மாதாந்திர குறைந்த பட்ச ஊதியமாக 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்று வருவதாகவும் தற்போதைய பணவீக் கத்திற்கு இது போதுமானதாக இல்லை என அந்நாட்டின் தேசிய எஃகு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல துறை தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் செய்கின்றனர்.