பாலஸ்தீனர்களுக்கு உணவு வழங்கியதாக உலகை ஏமாற்றும் அமெரிக்கா
காசாவில் வெறும் 35 ஆயிரம் உண வுப் பொட்டலங்களை விமானம் மூலம் வீசி விட்டு அனைவருக்கும் உணவு வழங்கியது போல உலகை ஏமாற்றுகிறது அமெரிக்கா. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையின் ஒரு பகு தியாக உணவு சப்ளையை தடுத்து வருவதோடு உணவு தேடியவர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. இதன் தீவிரத்தை மறைப்பதற்காக தற்போது வெறும் 35,000 உணவுப் பொட்டலங்க ளை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2030 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் கோடி டாலர் வர்த்தகம்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா விற்கும் ஐக்கிய அரபு அமீர கத்திற்கும் இடையே 10,000 கோடி டாலர் அளவிற்கு எண்ணெய் அல்லாத வர்த்த கம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஜவுளி, நகைகள், மருந்து உள்ளிட்ட துறைக ளுக்கு மிகப்பெரிய வணிக வாய்ப்புகள் இருப்பதால் அத்துறைகளில் வணிகத்தை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு
குவைத் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றம் கடந்த மாதம் கலைக்கப்பட்ட நிலையில் 2024 ஏப்ரல் 4 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக அந்நாட்டில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதனால் ஆட்சி கலைப்புகள் நடப்பது மட்டுமல்லா மல் அந்நாட்டின் சமூகப் பொருளாதார நிலை யும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையால் இலங்கையில் சிறு முன்னேற்றம்
சுற்றுலாத்துறையின் காரணமாக இலங்கை அரசு சற்று பொருளாதார முன்னேற்றத்தை கண்டு வருகிறது. 2024 ஜனவரி மாதம் மட்டும் ரூ.2,800 கோடி களுக்கும் அதிகமாக சுற்றுலா துறை மூலம் வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு டன் ஒப்பிடும் போது 112 சதவீதம் அதிக மாகும். இந்நிலையில் முன்னாடி சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த அந்நாட்டு அரசு புதிய முதலீடுகளை மேற்கொள்ள உள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் பாடகருக்கு 3 ஆண்டுகள் சிறை
கிராமிய விருது வென்ற ஈரான் பாடகர் ஷெர்வின் ஹாஜிபூருக்கு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷெர்வின் ஹாஜிபூரின் பாடல்கள் கட்டாய ஹிஜாப் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த ஈரான் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.