அல்-ஷிபா மருத்துவமனை ‘மரண மண்டலமாக’ உள்ளது
வடக்கு காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவத்தால் உருவாக்கபட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடியை விவரித்தது, ஒரு கூட்டு ஐ.நா மனிதாபிமான மதிப்பீட்டுக் குழு. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவமனைக்கு செண்டு ஒரு மணி நேரம் நடத்திய ஆய்விற்கு பிறகு அல்- ஷிபா மருத்துவமனை ‘மரண மண்டலமாக’ உள்ளது என கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 8 ஆக உயர்வு
தெற்கு பிலிப்பைன்ஸ் மிண்டானாவ் தீவில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அள விலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி காணாமல் போன மேலும் இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நிலநடுக்கத்தில் இறந்த வர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள் ளது என்று நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
‘தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உரிமை இல்லை’
பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதால் ஹமாஸ் குழுவிற்கு எதிராக நடத்தும் தாக்கு தலை தற்காப்பிற்காக நடத்துகிறோம் என சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கோரு வதற்கு இஸ்ரேலுக்கு எந்த உரிமையும் இல்லை என ஆஸ்திரேலியாவில் நேஷ னல் பிரஸ் கிளப்பில் உரையாற்றிய ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா : 2 +2 பேச்சுவார்த்தை
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதம ரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் ‘இந்தியா- ஆஸ்திரேலியா 2 + 2 அமைச்சர்கள் பேச்சு வார்த்தை’யில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ளனர். இந்த சந்திப்பில் பாது காப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஆக்கப்பூர்வ தீர்வுகாண விவாதம்
மாலத்தீவின் புதிய ஜனாதிபதி யாக பொறுப்பேற்றுக் கொண்ட முகமது முய்சு, இந்தியா தனது இராணுவ வீரர்களை மாலத்தீவு பகுதிகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என முறை படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்த பிரச்சனைக்கு இரு தரப்பினரும் “ஆக்கப்பூர்வ தீர்வுகளை” விவாதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.