world

img

கல்வியை இழந்து நிற்கும் ஆப்கன் சிறுமிகள் ஈரானில் தஞ்சம்

காபூல்/டெஹ்ரான், மே 17- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் தோல்வியுற்று அமெரிக்க  ராணுவம் வெளியேறியது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தலிபானின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதே அத்த கைய முடிவை அவர்கள் எடுப்பதற்குக் காரணமாக இருந்தது. அமெரிக்கா ராணு வம் வெளியேறிக் கொண்டிருந்தபோதே, தலைநகர் காபூல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் தலிபான்கள் முழுமை யாகக் கைப்பற்றிக் கொண்டனர். சில நாட் களுக்கு விமான நிலையத்தை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்க ராணு வம் வைத்திருந்தது. 

அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு, பெண் குழந்தைகளால் பள்ளிக் கூடங்களுக்குப் போக முடியாது என்ற கருத்து இருந்தது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பள்ளிக்கூடங்களுக்குச்  செல்வதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் உறுதியளித்திருந்த னர். மார்ச் 23 ஆம் தேதியன்று பள்ளிக்கூடங் களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான மாணவிகள் நாடு முழுவதும் தயாராக இருந்தனர். ஆனால் அதிகாரத்தில் அமர்ந்த வுடன் தங்கள் வாக்குறுதியை தலிபான் கள் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.

பள்ளிக்கூடங்களில் வாயில்களில் இருந்த தலிபான்கள் மாணவிகள் உள்ளே செல்வதைத் தடுத்தனர். மாணவி கள் கண்ணீர் ததும்ப தங்கள் வீடுகளு க்குத் திரும்பினார்கள். இந்தக் காட்சியைக் கண்ணால் பார்த்த ஆசிரியை நிலோபர், “வீட்டுக்குச் செல்லுங்கள். இதுவரை படித்ததே உங்கள் எல்லாருக்கும் போது மானது என்று தலிபான்கள் கூச்சலிட்டனர்” என்றார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. அம்முகாம்களில் உள்ள குழந்தைகளுக்காகப் பள்ளிக் கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிக்கூடங்களில் மாணவிகளின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்து வருகிறது. எல்லை நகரமான மசாத்தில் உள்ள பள்ளிக்கூட வகுப்பறைகள் நிரம்பி வழி கின்றன. உட்கார நாற்காலிகள் இல்லை. சிலர் நின்றுகொண்டே பயில்கிறார்கள். சிலர் தங்கள் நாற்காலிகளைப் பகிர்ந்து  கொள்கிறார்கள். குறிப்பாக நூற்றுக் கணக்கான இளம்பெண்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். ஈரானில் உள்ள அகதிகள் முகாமிற்கு பொருளாதாரம் மற்றும் பாது காப்பின்மை காரணமாக வந்து கொண்டி ருந்தனர். தற்போது கல்வியும் காரணமாகி விட்டது என்று பள்ளிக்கூடமொன்றின் முதல்வர் கூறியிருக்கிறார்.