world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேட்டோ நாடுகளுக்கு  இரண்டாவது முறை எச்சரிக்கை

உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யா முன்னேறி வரும் நிலையில் அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் போரை தீவிரமாக்கி வருகின்றன. தற்போது அவை ரஷ்ய எல்லையில் மிகப்பெரும் பயிற்சி யில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனு க்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் தங்கள் வீரர்க ளை அனுப்பினால் அது அணு ஆயுத போராக மாறும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள் ளார். இது நேட்டோ நாடுகளுக்கு அவர் விடுத் துள்ள இரண்டாவது எச்சரிக்கையாகும்.

மாலத்தீவு நாடாளுமன்றத்  தேர்தல் தேதி மாற்றம்

மாலத்தீவு  நாடாளுமன்றத் தேர் தல் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.தேர்தலை ஒத்திவைக் கும் மசோதாவிற்கு  ஜனாதிபதி முகமது முய்சு  ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து  தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 17 ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப் பட்டிருந்த நிலையில் 2024 மார்ச் 10 முதல் 2024 ஏப்ரல் 9 வரை ரம்ஜான் விழா காலம் என்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளது.  

ஈரானில்  பொதுத் தேர்தல்

ஈரானின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற் றது.  மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர்  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையே அமெரிக்க எதிர்ப்பு என்ற கோ சத்தை முன் வைத்து இந்த தேர்தலை அந்நாட்டு ஆளும் தரப்பு எதிர்கொள்கிறது. 290 இடங்க ளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பா ளர்கள் போட்டியிடுகின்றனர். 8.5 கோடி  மக்களில் 6.1 கோடி வாக்காளர்கள் வாக்க ளிக்க உள்ளனர்.

டெஸ்லாவின் சுரண்டலுக்கு எதிராக மரங்களில் ஏறி போராட்டம்

ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை 420 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் உள்ளூர் மக்களுக் கான குடிநீர் ஆதாரம், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை டெஸ்லா நிறுவனம் சுரண்டுவதை கண்டித்து ராபின் வுட் என்ற சூழலியல் பாதுகாப்பு குழுவினர், அந்நிறுவ னம் விரிவாக்கம் செய்யும் காட்டுப் பகுதி யில் உள்ள மரங்களின் மீது ஏறி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேச தலைநகரில்  பயங்கர தீ விபத்து 

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில்  நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு 70 பேர்களை மீட்டுள்ளனர். அதில் 44 பேர் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.