லண்டன், ஜூலை 23- போரிஸ் ஜான்சன் பதவி விலகு வதற்குக் காரணமாக இருந்தவர் என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டதால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியிலிருந்து விலகி னார். புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் வரையில் அவரே இடைக்கால பிரதம ராக நீடிப்பார். இந்நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தனது புதிய தலை வரைத் தேர்வு செய்யும் பணியைத் தொ டங்கியுள்ளது. புதிய தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர்தான் பிரதமரா கவும் தேர்வாவார். முதல் சுற்றில் எட்டு பேர் போட்டி யிட்டனர். பல சுற்றுகளுக்குப் பிறகு, கடைசிச் சுற்றில் போட்டியிடும் இரு வர் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.
இதுவரையில், நாடாளுமன்ற உறுப்பி னர்களின் வாக்குகளே தீர்மானித்து வந்தன. அவர்கள் பங்கேற்ற வாக்களிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கும், 46 வயது நிரம்பிய பெண் மணி லிஸ் டிரஸ்சும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வந்த மோர்டாண்ட், கடைசியாக நடந்த சுற்றில் பின்தங்கினார். இனிமேல், கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து புதிய தலைவரைத் தேர்வு செய்வார்கள். ஆகஸ்டு 4 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் இந்த வாக்கெடுப்பு நடை பெறும். செப்டம்பர் 5 ஆம் தேதி யார் புதிய தலைவர் என்ற அறிவிப்பு வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ரிஷி சுனாக்கை விட, லிஸ் டிரஸ்சுக்குதான் ஆதரவு அதிகம் உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பி னர்கள் மத்தியில் யூகவ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், தங்கள் வாக்குகள் லிஸ் டிரஸ்சுக்குதான் என்று 62 விழுக்காட்டி னரும், ரிஷி சுனாக்குக்கு 38 விழுக் காட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ள னர். 730 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. இதற்கு முன்பு நடை பெற்ற ஐந்து சுற்றுகளிலும் முதலி டத்தில் இருந்த ரிஷி சுனாக், கடைசிச் சுற்றில் பின்தங்குகிறார். ஆளும்கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 137 பேர் ரிஷி சுனாக்கிற்கும், 113 பேர்லிஸ் டிரஸ்சுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.