தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழா கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில் இலண்டனில் ஜனவரி 17 அன்று பிரிட்டன் நாடாளுமன்ற உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் கொண்டாடப்பட்டது. உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரிட்டனுக்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி இலங்கையில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேச சமூகம் தலையிட்டு பாதுகாக்க வேண் டும் என்று விழாவில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவை 2011இல் ஹரோ மாநகர அவையுடன் (Harrow Council) இணைந்து தை பொங்கல் விழாவை நடத்தி ஒரு விதை விதைக்கப்பட்டது தொடர்ச்சியாக அதனை வருடா வருடம் வளர்த்து மக்கள் மயப்படுத்திய தன் விளைவு பிரிட்டானில் மட்டுமல்லாது பல்வேறு நாடு களிலும் “தமிழ் மரபு திங்கள்” மற்றும் “தை பொங்கல்” எனும் கருப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றதனை நினைவுபடுத்தினார்கள்.
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்ட “கடல்சார் பயணம் மற்றும் உலகமயமாக்கலின் முன்னோடியான தமிழ் பாரம்பரியம்” (Tamil Heritage Pioneered Maritime Expedition & Globalisation) என்ற ஒரு காணொளி வெளியிட்டது. இக் காணொளி தமிழ் மக்களின் பிரமாண்டமான ஆக்கத் திறனையும் திரை கடலோடி திரவியம் தேடுதல், உலகமயமாக்கம் மற்றும் படைநகர்த்தலில் தரைவழி பாதை இன்றி ஆயிரக்கணக் கான கடல் மைல்கள் ஆழ்ந்த சமுத்திரத்தினூடு நெடு நாட்கள் பயணித்து தொலை தூர நாடுகளை வசப்படுத்தும் பிரமிக்கத் தக்க ஆற்றலை தமிழர் படை 1000 வருடங் களுக்கு முன்னே முன்னோடியாக சாதித்தமையை சரித் திரப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கு கின்றது. இது நடந்து ஏறத்தாழ 500 வருடங்களின் பின்னரே ஐரோப்பாவிலுள்ள நாடுகள் நீண்ட தூர கடற்படை கட்டமைப்புகளை உருவாக்கி தத்தம் சாம்ராஜ்யங்களை நிர்மானிக்கத் தலைப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தாம் உறு துணையாக நிற்பதனை மீண்டும் வலியுறுத்தினார்கள். தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வண்ணமயமான இந்த நிகழ்வில் இங்கிலாந்தின் மூன்று பிரதான கட்சிகளின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கவுன்சிலர்கள், பிரபுக்கள் சபையின் உறுப்பினர் ஒருவர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினை பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் முன்னின்று நிகழ்த்தினார்கள்.