ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள செம்புச் சுரங்கத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சிக்கிக்கொண்ட முறைசாரா தொழிலாளர்களை மீட்க 6 நாட்களுக்குமேலாக பெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
ஜாம்பியா தலைநகரில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள சிங்கோலாவில் உள்ள செசெலி செம்புச் சுரங்கத்தில் கடந்த வாரம் வியாழன் இரவு அதிக
மழையின் காரணமாக ஏற்பட்ட சரிவில் சுரங்கத்துக்குள் மூன்று பகுதிகளில் ஆப்பிரிக்க முறைசாரா தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீட்புப்படையினர் மீட்புப் பணியை துவங்கியுள்ளனர்.தற்போது வரை உள்ளே எத்தனை தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர் என்ற தகவலை அரசாங்கம் வெளியிடவில்லை. தற்போது வரை 25 தொழிலாளர்களின் குடும்பங்கள் தமது குடும்ப உறுப்பினர்கள் அங்கு பணிபுரிவதாக கூறியுள்ளனர்.
அதிக மழை மற்றும் மெல்லிய தரையின் காரணமாக சுரங்கத்தில் துளையிடும் பணியை வேகப்படுத்தினால் இடிபாடுகள் மேலும் மோசமாகிவிடும்.எனவே துளையிடும் பணி மெதுவாக நடைபெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவு செம்பு உற்பத்தி செய்யப்படும் முதல் 10 நாடுகளில் ஜாம்பியாவும் ஒன்று.ஆதீத லாபத்திற்காக நாட்டின் வறுமை நிலையை பயன்படுத்தி குறைவான சம்பளத்தில் பாதுகாப்பற்ற முறையில் அதிகள
விலான முறைசாரா தொழிலாளர்களை சுரங்கப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.