world

img

எத்தியோப்பியா அமைதி ஒப்பந்தம்!

ஆப்பிரிக்காவின் கொம்பு என ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதி அழைக்கப்படுகிறது. சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா, சூடான், எரீட்ரியா, தெற்கு சூடான், உகண்டா, ஜிபோட்டி ஆகிய எட்டு நாடுகள் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் உணவு பாதுகாப்பின்மை, மோதல்கள், போர்கள் நிலவுகின்றன. எத்தியோப்பியாவில் டைகிரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) யின் எதேச்சதிகார   ஆட்சி 27 ஆண்டுகளாக நடைபெற்றது. 27 ஆண்டு டிபிஎல்எப் ஆட்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகளும், சுதந்திர ஊடகமும் தடை செய்யப்பட்டிருந்தன. 2018-ல் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களால் டிபிஎல்எப் ஆட்சி அகற்றப்பட்டு அபி அகமது என்பவர் பிரதமர் ஆனார். 2020 நவம்பரில் எத்தியோப்பிய அரசுக்கும் டிபிஎல்எப்-க்கும் இடையே போர் மூண்டது. எத்தியோப்பியாவின் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். அரசு ராணுவ கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டது.

60 லட்சம் மக்கள் தொகை உள்ள நாட்டில் ஆறு லட்சம் டைக்ரிய இனத்தவர் முதலில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி இருந்தனர். இடையிடையே சில சமாதான உடன்பாடுகள் ஏற்பட்டாலும் டிபிஎல்எப் அவற்றை மீறி நடந்து கொண்டது. நவம்பர் 2017-ல் எத்தியோப்பிய தேசிய பாதுகாப்பு படைகள் மற்றும் டிபிஎல்எப் -பின் மூத்த தலைவர்கள் கென்யாவின் தலைநகரம் நைரோபியில் சந்தித்து அமைதி ஒப்பந்தத்திற்கான, ஆயுத ஒப்படைப்புக்கான விரிவான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர். நவம்பர் 2019-ல் தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரம் பிரிட்டோரியாவில் எத்தியோப்பிய கூட்டாட்சி அரசுக்கும், டிபிஎல்எப்-க்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக வடக்கு எத்தியோப்பியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது.  ஆனால் டிபிஎல்எப் ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து வருகிறது. அமெரிக்காவின் சொல்படி இயங்குகிறது. டிபிஎல்எப்-ன் ஆயுதங்களை பறிமுதல் செய்; நிராயுதபாணியாக்கு    என பல்லாயிரக்கணக்கான மக்கள் எத்தியோப்பியாவிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் எத்தியோப்பியர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இனி நடைபெறும் தேர்தலில் பங்கு கொண்டு டிபிஎல்எப் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே. அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா சீர்குலைக்காமல் இருக்குமா...? பொறுத்திருந்து பார்ப்போம்.