world

img

நைஜீரியாவில் பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஓயோ மாகாணத்தின் இபாரபா பகுதியில் பயணிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.

அதையடுத்து, அந்த இரு பேருந்துகளில் தீப்பிடித்தது. இதில், அந்தப் பேருந்துகளில் இருந்த 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் அந்தப் பேருந்துகளும் தீயில் கருகின.

விபத்தில் சிக்கிய 2 பேர் மோசமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  அதிகமான வேகத்தில் வாகனங்களை இயக்கியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;