பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவதாக தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்க தலைநகரான ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். இந்த உச்சிமாநாட்டில் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவது, கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைப்பது, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வது குறித்தான மிக முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவதாக தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா, எகிப்து, எதோப்பியா, ஈரான், சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக்கும் ஒப்பந்தம், வரும் 2024 ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றது.