world

img

இந்தியாவில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

புதுதில்லி, நவ. 24- புதுதில்லியில் உள்ள தங்களது  தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்கனில் தலிபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அவர் கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகளின் காரணமாக நவம்பர்  23, 2023 முதல் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா எந்த ஒரு சிறப்பு உதவியையும் செய்ய மறுக்கிறது என்றும்; அக்டோபர் 1 முதல் ஆப்கன் தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஆப்க னின் குற்றச்சாட்டை மறுத்தது.

ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருந்த  அமெரிக்கா தலிபான்களி டம் ஒப்படைத்துச் சென்றவுடன்  அதிகா ரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்க ளுக்கான உரிமைகளை முற்றாகப் பறித் துள்ளனர். எனவே ஆப்கானிஸ்தானில்  தலிபான் ஆட்சிக்கு பல உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூத ரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுப்பு தெரிவித்து வந்தன. இந்த சூழலில் தலைநகர் தில்லியில் உள்ள தூதரகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை என்றும்; ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவை கள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் தில்லியில் உள்ள தூதரகத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், ஊழியர்களின் எண்ணிக் கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிக ளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி கள் வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. இத னால் பிரச்சனைகள் அதிகரித்து வரு கிறது. மேலும் தலிபான் அரசு நியமிக்கும் தூதரை இந்தியா அங்கீகரிக்காத வரை தூதரக விவகாரத்தில் முடிவுகள் எட்டப் படாது எனவும் ஆப்கன் தூதரகம் தெரி வித்துள்ளது. இந்த முடிவால் இந்தியாவில் உள்ள ஆப்கன் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விசா புதுப்பிப்பது மற்றும் உதவிகள் பெறுவது உள்ளிட்ட வற்றில் பெரும் சிரமங்கள் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.