ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை 2 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பால் 9 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் பால்க் மாகாணத்தின் தலைநகரான மஸார்-இ-ஷரீப்பில் இரண்டு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் காவல்துறை உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 2 குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.