மோசமான பொருளாதார நிலை, அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது, தொழிலாளர் விரோதப் போக்கு என மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக அர்ஜெண்டினா ரயில்வே மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
லாஃப்ரெடெர்னிடாட் தொழிற்சங்கவாதி யும்,அர்ஜெண்டினா ரயில் நடத்துநர்கள் தொழிற்சங்க தலைவருமான ஒமர் மடுரானோ, ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதை உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
தொழிலாளர்களின் அடிப்படைச் சலுகைக ளையோ , கோரிக்கைகளையோ அர்ஜெண்டினா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு துறையிலும் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக் கான அடிப்படைத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அன்றாட வாழ்வை நடத்துவதே பெரும் போராட்டமாக மாறி வருகிறது. இந்த சூழலில் பொதுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உற்பத்தியை பெருக்காமல் ஜேவியர் மிலெய் தலைமையிலான தீவிர வலது சாரி அரசாங்கம் நவதாராளமய கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது.
இதன் காரணமாக பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்ப தோடு அந்நாட்டின் நாணயமான பெசோவை மதிப்பிழக்கச் செய்ய முடிவு செய்து விட்டது. அதற்கு மாற்றாக அமெரிக்க டாலருக்கு முக்கி யத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது அந்நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் ஊதிய உயர்வை கேட்கவில்லை.பணவீக்கத்திற்கு ஏற்றவகையில் வாழ்க்கைச் சூழலை சமாளிக்க தேவையானதை உருவாக்கி சரிசெய்வதை மட்டுமே எதிர் பார்க்கி றோம்.
ஆனால் அதைக்கூட அரசு ஏற்க மறுக்கிறது என மடுரானோ தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தின் காரணமாக சில தொலைதூர சேவைகள் தவிர அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும். இதனால் முன் பதிவு செய்தவர்களின் பயணம் பாதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.