world

img

‘நீங்கள் தேசபக்தர்கள்; நாங்கள் பயங்கரவாதிகளா?’ - - எஸ்.பி.ராஜேந்திரன்

மேற்கு ஆப்பிரிக்காவில் நடப்பது என்ன?

35 வயதுதான் ஆகிறது. ‘புர்கினோ பசோ’ என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு. இந்நாட்டில் 2022 ஜனவரியில் ராணுவக் கிளர்ச்சி நடத்தி ஆட்சிக்கு வந்த இவர், சில மாதங்களிலேயே அங்கு நீண்ட காலமாக முகாமிட்டிருந்த பிரான்ஸ் ராணு வத்தினரை வெளியேற்றினார். பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் யுரேனியம் ஏற்றுமதி செய்வதை தடை செய்தார். ஆப்பிரிக்கா தனது  சொந்த வளங்களைக் கொண்டு தானே மாபெரும் வளர்ச்சி எட்ட முடியும் என்றும் ‘இந்த  நூற்றாண்டு ஆப்பிரிக்காவின் நூற்றாண்டாக’ இருக்கும் என்றும் தொடர்ந்து முழங்குகிறார்.  கேப்டன் இப்ராகிம் தரோர்! மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பெரும் எழுச்சியுடன் உருவாகியுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களுக்கு இவரது குரல் வலு சேர்க்கிறது.

சமீபத்தில் 2023 ஜூலை 27-28 தேதி களில் ரஷ்யா - ஆப்பிரிக்கா உச்சிமாநாடு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. நீண்ட பல ஆண்டுகள் கழித்து நடந்துள்ள இந்த மாநாடு உலக அரசியல் அரங்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஒருபுறம் ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வரும் நிலை யில்; இந்தப் போரை முன்னிறுத்தி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணு வக் கூட்டணி ரஷ்யாவை சுற்றி வளைக்க சூழ்ச்சிகள் செய்துவரும் நிலையில்; ஆப்பி ரிக்க நாடுகளுடன் ரஷ்யா தனது உறவை வலுப்படுத்துவதும்; குறிப்பாக  அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ராணு வத்தினர் கிளர்ச்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு உடனடியாக ஆதரவு தெரிவித்து, நேரில் அழைத்து உறவுகளை பலப்படுத்துவதும்... போன்ற நிகழ்வுகள் இன்றைய உலக அரசியல் அரங்கில் கூர்ந்து  கவனிக்கப்பட வேண்டியவை; ஒன்றோ டொன்று நெருங்கிய தொடர்பு உள்ளவை. இந்த மாநாட்டில் ஒரு கதாநாயகனைப் போல வரவேற்பு பெற்றார் கேப்டன் இப்ராஹிம் தரோர். ஆப்பிரிக்க கண்டத்தில் மொத்தமுள்ள 54ல் 49 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், இப்ராஹிம் தரோர் உள்பட 17 நாடுகளின் ஜனாதிபதிகளும் பங்கேற்றார்கள்.  இம்மாநாட்டின் மைய நோக்கமாக, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து ஒட்டுமொத்த உலகின் தெற்கு நாடுகள் மெல்ல மெல்ல விலகி, பன்முக உலகம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதிப்படுத்துவது என்ற நகர்வை வலுப்படுத்துவது என்ப தாகவே இருந்தது.  இந்த மாநாட்டில் இப்ராகிம் தரோர் ஆற்றிய உரை துள்ளல் மிக்கது. இளமைத் துடிப்புமிக்கது. பல்லாண்டு காலமாக ஏகாதி பத்தியங்களின் அடிமைகளாக இருக்கும் தங்களது மக்களை விடுவிக்க வேண்டும் என்ற ஆப்பிரிக்க இளைய தலைமுறையின் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தியது.

“ஓர் அடிமை, அந்த அடிமைத்தனத்திற்கு எதிராக தான் நடத்தும் கிளர்ச்சி, யாராலும் இரக்கத்துடன் பார்க்கப்படக்கூடாது என்றே விரும்புவான். நாங்கள் ஒருபோதும் எங்களுக் காக வருத்தப்படவில்லை. எங்களுக்காக யாரும் வருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை” என்ற இப்ராஹிம் தரோரின் முழக்கம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டு மல்ல, மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் உலகிலும் எதிரொலித்தது.  ஏகாதிபத்தியத்திற்கும் வறுமைக்கும் எதி ரான போராட்டத்தை ஒட்டுமொத்த ஆப்பிரிக்கர் களும் பெரும் எழுச்சியுடன் நடத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  ஆப்பிரிக்காவில் மக்களின் அடிமைத்தனத் திற்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டத் திற்கு இதற்கு முன்பும் இப்போதும் பெரும் ஆதரவு அளிக்கிற ரஷ்யாவை நன்றிப் பெருக்குடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். “ரஷ்யா எங்கள் தோழன்; விளாடிமிர் புடின் எங்களது தோழன்” என்று செயிண்ட்  பீட்டர்ஸ்பர்க் உச்சிமாநாட்டில் உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்ட கேப்டன் இப்ராஹிம், “எனது தலைமுறைக்கு சில கேள்விகள் இருக் கின்றன. சில அல்ல, ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு, எங்களை அடிமைப்படுத்தியவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை” என்று ஆப்பிரிக்க இளைஞர்களின் வேதனையைப் பதிவு செய்தார்.

“ரஷ்யாவின் உதவிக்கரமும் நட்பும், நீண்ட காலமாகவே துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் எங்களது குடும்பங்களில் புதிய காற்றை வீசச் செய்திருக்கிறது. ஒட்டு மொத்த ஆப்பிரிக்காவுக்கும் ரஷ்யா ஒரு குடும்ப நண்பனாக, தோழனாக இருக்கும். முந்தைய வரலாறு அதைத்தான் சொல்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது பாசி சத்தின் பிடியிலிருந்து இந்த உலகையே பாது காப்பதற்காக ரஷ்யா (சோவியத் ஒன்றியம்)செய்த தியாகங்கள் அளவிட முடியாதவை. எங்களது ஆப்பிரிக்க மக்கள், எங்களது மூதாதையர்கள், நாஜிசத்தின் பிடியிலிருந்து - பாசிசத்தின் பிடியிலிருந்து ஐரோப்பா தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பலவந்தமாக போர்க்களத்தில் நிறுத்தப்பட்டார்கள். வர லாற்றின் பக்கங்களிலிருந்து, எங்களது மூதாதையர்களின் இந்த மகத்தான தியாகம் மறைக்கப்பட்டுவிட்டது. பாசிசத்திற்கு எதிரான போரில் எங்களது பங்கைப் பற்றி யாரும் புத்தகம் எழுதவில்லை. திரைப்படம் எடுக்க வில்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவும் ஆப்பிரிக்காவும் தோளோடு தோள் நின்று போராடிய மகத்தான தோழர்கள். அதுவே வரலாறு. எங்களது மக்களுக்கு ஒரு சுதந்திரமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காகவே உங்கள் முன்னால் நிற்கிறேன். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலை யிடாத இறையாண்மை உறுதி செய்யப்பட வேண்டும். 

எங்களது மண்ணில் அளவற்ற செல்வம்  குவிந்திருக்கிறது. இயற்கையின் பெரும் கொடை எங்களது கண்டத்தில் நிறைந்திருக் கிறது. தண்ணீர் வளம் உள்பட அனைத்து இயற்கை வளங்களும் அளவிட முடியாத அளவிற்கு இருக்கிறது... ஆனால் எங்கள்  ஆப்பிரிக்கா இன்றைக்கும் ஏன் வறுமை யிலும் வறுமை தாண்டவமாடுகிற கண்டமாக இருக்கிறது? எங்களது ஆப்பிரிக்கா ஏன் இப்போதும் பசியின் கொடுமையில் தவிக்கி றது? எங்களது நாடுகளின் தலைவர்கள் ஏன் இப்போதும் உலக நாடுகளிலெல்லாம் போய்  கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்? ஒட்டுமொத்த ஆப்பிரிக்க இளைய தலை முறையின் நெஞ்சங்களில் கனன்று கொண்டி ருக்கும் இந்தக் கேள்விகளுக்கு பதில் என்ன?  எங்களை நாங்களே கேட்டுக் கொள்கிறோம். விடைதேட முயற்சிக்கிறோம். எங்களுக்கு புதிய உறவுகள் தேவை. எமது மக்களின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிறந்த நட்புகள் தேவை.  வறுமையின் துயரத்தால்தான் எமது மக்கள் கடல் கடந்து சென்று ஐரோப்பிய நாடு களை அண்டி இருக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். கடல்களைக் கடக்கும் போது எண்ணற்றோர் மூழ்கி இறந்தார்கள். தங்களது தினசரி ரொட்டித் துண்டுக்காக - ஐரோப்பிய அரண்மனைகளின் உத்தரவு களுக்காக காத்திருந்தார்கள்.

புர்கினோ பசோ, எங்களது நாடு. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அங்கே  மிக மிகக் கொடூரமான, காட்டுமிராண்டித்தன மான ஏகாதிபத்திய - நவீன காலனி ஆதிக்கத் தின் வடிவமாக உள்ள ஆட்சியாளர்களோடு மோதியிருக்கிறோம். நாகரிக உலகம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும் கூட அங்கே அடிமைத்தனம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. எங்களது மூதாதையர்கள் சொன்னார்கள்: “அடிமைத்தனத்திலிருந்து வெளியேறு; ஓர் அடிமையின் எழுச்சி மற்றவர் களின் கருணையிலிருந்து பிறந்துவிடாது. நம்மை பார்த்து யாரும் கழிவிறக்கம் கொள்ள  வேண்டிய அவசியம் இல்லை; எங்களுக்கு கருணை காட்டுங்கள் என்று எவரிடமும் கெஞ்சவேண்டியதில்லை.” அந்த முழக்கத்தை நெஞ்சிலேந்தி ஏகாதி பத்தியத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராகவும், புதியதோர் மறுமலர்ச்சிக்காகவும் களமிறங்கினோம். 

அந்த மாபெரும் போராட்டத்தில், எங்களது நாட்டின் 20 வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த துடிப்பான தோழர்கள் ஆயுத மேந்தினோம்; பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடித்தோம். ஏகாதிபத்திய சக்திகள் எங்களை பயங்கரவாதிகள் என்றார்கள். ஆமாம், ஐரோப்பாவில் உள்ளவர்கள் தங்க ளது தாய்நாட்டை காப்பதற்காக ஆயுத மேந்தினால் அவர்களுக்கு பெயர் தேச பக்தர்கள்; ஆனால் ஆப்பிரிக்க மக்கள் தங்களது தாய்நாட்டிற்காக ஆயுதமேந்தினால் அவர்கள் பயங்கரவாதிகள். எங்களது முன்னோர்கள், ஐரோப்பாவைப் பாது காப்பதற்காக இங்கிருந்து அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே ஐரோப்பியர்களின் போர்க்களத்தில் நிறுத்தப் பட்டார்கள். அவர்களது சம்மதம் இல்லாமலே போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள். எதிரிப் படைகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.இப்போது நாங்கள் எங்களைப் பாது காப்பதற்காக போராடுகிறோம்; அந்த ஐரோப்பி யர்கள் எங்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். எங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல; ஐரோப்பியர்கள் மனித உரிமைகளைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அது வெட்ககரமானது. ஆப்பிரிக்காவில் அவர்கள் நிகழ்த்தாத மனிதப் படுகொலைகளா?

எங்களது நாடுகளின் பல தலைவர்கள் இப்போதும் அவர்களது கைக்கூலிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய சக்திகள் ஆட்டுவிக்கிற படி ஆடுகிற பொம்மைகளாக ஒவ்வொரு முறை யும் இருக்காதீர்கள்.  ஜனாதிபதி விளாடிமிர் புடின் எங்களுக்கு உணவு தானியங்கள் அனுப்புவதாக உறு தியளித்திருக்கிறார். நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அடுத்த முறை இந்த மாநாட்டிற்கு வரும் போது உணவு உற்பத்தியில் தன்னி றைவு பெற்ற மக்களாக நாங்கள் இருப்போம் என்று உறுதியளிக்கிறேன். நல்ல நண்பர்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறீர்கள். உங்கள் உதவியோடு எங்களது போராட்டத்தை, எங்களது முன்னோர் நடத்திய போராட்டத்தை வலுவாகத் தொடர்வோம். எங்கள் தேசத்தையும் மக்களையும் பாதுகாப்போம் அல்லது போராடி மரணத்தை தழுவுவோம். நன்றி தோழர்களே!” - என்று முழக்கமிட்டார் கேப்டன் இப்ராஹிம்.

மாலி, கினி, புர்கினோ பசோ, நைஜர் என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக சவால் விடுத்துள்ள ராணுவக் கிளர்ச்சிகளின்  இயக்கு  சக்தியாக இருப்பது, அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்ற அவர்களது வேட்கையும் பல்லாண்டு காலமாக அந்த இளைஞர்களை ஈர்த்து வரும் புரட்சிகரச் சிந்தனைகளுமே ஆகும்.