world

img

மீண்டும் வேண்டும் வாழ்வுரிமை ! அமெரிக்காவில் போர்க்குரல்கள்

நியூயார்க், ஏப்.15- அமெரிக்க மக்களுக்கு வாழ்வுரிமை மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக் கையுடன் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் பெரு நகரமான நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்று, மோசமாகி வரும் சூழல் குறித்த கண்டனக் குரல்களை எழுப்பி யுள்ளார்கள். அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு என்பது  அனைவருக்குமானதாக இல்லை. இந்த நிலைமை கொரோனா பெருந்தொற்றின்போது பெரும் நெருக்க டியை உருவாக்கியது. பணக்கார நாடு என்று  சொல்லிக் கொண்டாலும், கொரோனா உயிரிழப்பில் முன்னணியில் உள்ளது. ஏராளமான உயிரிழப்புகளைத் தடுத்தி ருக்கலாம் என்று பல வல்லுநர்கள் தெரி வித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த உரிமை மீட்கப்பட வேண்டும் என்றும் அமெ ரிக்க மத்தியில் கருத்து எழுந்திருக்கிறது. இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் முயற்சி நடந்துள்ளது. ஏழை மற்றும் குறைந்த வருமானத்தை ஈட்டும் தொழி லாளர்களை ஒருங்கிணைக்கும் விதமாக நாடு தழுவிய பேரணி ஒன்றிற்கு அறை கூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

தயாரிப்புக் கூட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே ஏராளமானோர் பங்கேற்ற னர். “வாழ ஒவ்வொருக்கும் உரிமை உண்டு” மற்றும் “கீழிலிருந்து நாம் உயரும்போது அனைவரும் உயர்வோம்”  உள்ளிட்ட பல முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டார்கள்.  இந்தப் பேரணியில் பங்கேற்ற வில்லி யம் பார்பர்,”இந்த நாட்டில் ஏதோ ஒன்று தவ றாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அமெரிக்காவுக்கு ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. நாட்டில் நிலவும் வறுமைக்கு ஏழைகள் மீதே குற்றம் சாட்டுகிறார்கள்.அமெரிக்காவில் 14 கோடி மக்கள் வறுமையில் அல்லது குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள் “ என்று குறிப்பிட்டார். இனவெறி, சுற்றுச்சூழல் சேதம், போர்ப் பொருளாதாரம் உள்ளிட்ட வற்றிற்கு எதிராகவும் மக்கள் முழக்க மிட்டனர்.