world

img

“மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்”

ஹனோய், செப். 11 - ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  இந்தியா வந்திருந்தார். இங்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு,  ஞாயிறன்று வியட்நாம் நாட்டிற்குச் சென்றார்.  அங்கு தலைநகர் ஹனோயில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜி20 மாநாட்டில் விவா திக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, ஜோ பைடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.  அப்போதுதான், இந்தோ - அமெ ரிக்க உறவுகளை வலுப்படுத்து வதற்காக பிரதமர் மோடியுடன் கணிச மான விவாதங்களை நிகழ்த்தியதாக வும், குறிப்பாக, ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது, மனித உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு  கடந்த 10 ஆண்டுகளாகவே மனித உரிமை மீறல்களும், ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அதி கரித்துள்ளன. 

ஊடக சுதந்திரத்தில் 161-ஆவது இடம்

உலகில் பத்திரிகை சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசையில், 2021ல் 142-ஆவது இடம், 2022-இல்  150-ஆவது இடம், 2023-இல் 161-ஆவது இடம் என்று மிகமோசமான நிலையில் உள்ளது. இவை சர்வதேச அளவில் இந்திய ஜனநாயகத்திற்கு கரும்புள்ளியாக மாறியிருக்கின்றன. இந்நிலையில்தான், மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மீறல் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். “கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்த தைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டி யதன் முக்கியத்துவத்தையும், வள மான இந்தியாவை கட்டியெழுப்பு வதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திர மான ஊடகங்களுக்கு உள்ள முக்கியப் பங்கை நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன்” என்று  குறிப் பிட்டுள்ளார்.

கூட்டறிக்கையிலும் வலியுறுத்தப்பட்ட மனித உரிமை

முன்னதாக வெள்ளிக்கிழமை யன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் -பிரதமர் மோடி இடையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்ட றிக்கையிலும், “சுதந்திரம், ஜனநா யகம், மனித உரிமைகள், உள்ளட க்கிய தன்மை, பன்முகத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கு மான சமமான வாய்ப்புகள் போன்ற முக்கியமான காரணிகளே இரு நாட்டின் உறவுகளை பலப்படுத்துவ தாக அமைந்துள்ளன” என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவுடன் இந்தியாவை இணைக்க திட்டம்

ஜி20 மாநாட்டில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்தும் தனது பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கும் ஜோ பைடன், “மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் வழியாக இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் திட்டம் பற்றி பேசப்பட்டது. இது மாற்று பொருளாதார முதலீட்டுக்கான அள விலாத வாய்ப்புக்களை திறக்க இருக் கிறது. உச்சி மாநாட்டில் சட்ட விரோத மான உக்ரைன் போர் குறித்து விவா திக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், நியாயமான மற்றும் நீடித்த அமைதிக் கான தேவை குறித்த குறிப்பிடத்தக்க உடன்பாடு இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

பனிப்போரை துவங்க விரும்பவில்லை

மேலும், “வியட்நாம் மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம். சீனாவுடன் பனிப் போரை தொடங்க விரும்பவில்லை” என்று கூறியிருக்கும் ஜோ பைடன், ஜி20 மாநாட்டிற்கு இடையில் சீன பிரதமர் லீகியாங்-ஐ சந்தித்து, நீடித்த தன்மை பற்றி பேசியதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.