world

img

டோங்கோ: கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் சுனாமி – 3 பேர் பலி

டோங்கோவில் கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக 3 பேர் பலியாகினர்.  

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு டோங்கோ. இங்கு சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ளது. பல்வேறு தீவுகள் உள்ள இந்நாட்டில் சில தீவுகளில் எரிமலைகளும், அதில் சில எரிமலைகள் கடலுக்கு அடியிலும் அமைந்துள்ளது. குறிப்பாக இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது. இந்த எரிமலை கடந்த 15 ஆம் தேதி திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலை உருவாகி டோங்கோ நாட்டின் பல்வேறு தீவுகளுக்குள் புகுந்தன.    

இதில் எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. 50 பேரை மட்டும் மக்கள் தொகையாக கொண்ட மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது.  

15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளையும் அழித்து முற்றிலும் தரைமட்டமாக்கியது. இதுவரை இந்த எரிமலை வெடிப்பின் விளைவாக மூன்று பேர் இறந்ததாக டோங்கோ அரசாங்கம் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

சுனாமி தாக்கிய பல்வேறு தீவுகள் தற்போது வெளி உலக தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.