அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்தாக கூறி தனது தோல்வியை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சூழலில், வரும் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தல் ஆணையத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இது 3-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.