world

img

எண்ணெய் திருடும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க ஐ.நா.விடம் வலியுறுத்தும் சிரியா

டமாஸ்கஸ், செப். 13-  அமெரிக்கா  தனது ராணுவம் மூலம் பல ஆண்டுகளாக சிரியாவின் எரிவாயு மற்றும் பல லட்சம் பேரல் எண்ணெய் வளத்தை கொள்ளை அடித்துள்ளது எனவும்  தற்போது அதற் கான இழப்பீடை  அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் சிரியா வெளியுறவு அமைச்சகம்   ஐ.நா பொதுச்செயலா ளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவரான அல்பேனிய அரசு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறி  தங்கள் நாட்டின் வட கிழக்கு மற்றும் தென்கிழக்கில் சட்ட விரோதமாக ராணுவத் துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்காவின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச அமைப்பிற்கு  இக்கடிதம் மூலம் சிரியா தூதர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் தங்கள் நாட்டின் வளங்களை சூறையாடிய அமெரிக்கா வை குற்றவாளி என சிரியா குறிப் பிட்டுள்ளது.  2011 முதல் 2023 வரை அமெ ரிக்கா தனது ராணுவம் மூலம் சிரியா வில் இருந்து 11,520 கோடி டாலர்கள் அளவிற்கு எண்ணெய் வளங்களைத் திருடி உள்ளது  என்றும் இந்தத் திருட்டு க்கு அமெரிக்க அதிகாரிகள் பொறுப் பேற்க வேண்டும் என்றும், அமெரிக்கா அதற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும்  சிரியாவிலிருந்து அனை த்து அமெரிக்க ராணுவ வீரர்களை யும் அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அனை த்து எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் சிரிய அரசாங்கக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என அக்கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாத இறுதியில்,அமெரிக்க ராணுவ கூட்டுப்படைத் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, சிரியாவில் இரு ந்து மட்டும் அல்ல, மத்திய கிழக்கு நாடு களின் இருந்தும் தங்களது ராணுவம் வெளியேறாது எனக் கூறியுள்ளார். ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கிறோம் என காரணம் கூறிக் கொண்டு சிரியா முழுவதும்    எண்ணெய் வளங்களை சுரண்டி வருகிறது அமெ ரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.