world

img

கோரிக்கைகளை வெல்லும் வரை உறுதிமிக்க போராட்டம் தொடரும்

ஹாலிவுட்,அக்.13- இணைய ஒளிபரப்பு (ஸ்ட்ரீமிங்) தளங்கள், சந்தாதாரர்களின் எண் ணிக்கைக்கு ஏற்ற வகையில் போனஸ் வழங்கவும் வேண்டும் என கோரிக்கை வைத்து ஹாலிவுட் நடி கர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின்  கோரிக்கைகளை நிறு வனங்கள் ஏற்காத நிலையில் உரிய இழப்பீடு மற்றும்  உரிமைகளை பெரும் வரை உறுதியோடு போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.  160,000 நடிகர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களை   உறுப்பினர்களாகக்  கொண்ட  திரை நடிகர்கள், அமெ ரிக்க திரை மற்றும் வானொலி கலை ஞர்கள் (SAG-AFTRA)  சங்கத்தினர் ஊதிய உயர்வு,  பணியிடப் பாது காப்பு சுகாதார மேம்பாடுகள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை இழப்பிற்கான உரிய இழப்பீடுகள் கேட்டு ஜூலை மாதம் முதல் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  போராட்டக்குழுவினருடன்  வால்ட் டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிற ஊடக நிறுவனங்களின்  தலைமை  நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலா ளர்களின் கோரிக்கையை ஏற்கா மல் பேச்சுவார்த்தையை நிறுத்துவ தாக புதன்கிழமை அன்று தெரி வித்தனர். இதையடுத்து தொழிலாளர் கள் வியாழன் அன்று போராட் டத்தை தொடர்ந்தனர்.அப்போது பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும் உரிமைகளை வென் றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.

 மீண்டெழுந்து வெல்வோம்  நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்து க்கு வெளியே நடைபெற்ற போராட் டத்தில்  இந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்பது “படத்தின் நாயகன்  கீழே விழும்  பகுதிதான் நாளை  மீண்டெழுந்து  வெல்வோம்” என தொழிற்சங்க உறுப்பினர் ஜேசன் ஜார்ஜ் பேசினார். அமெரிக்க ஹாலிவுட் எழுத்தா ளர்கள் சங்கத்தின் நீண்ட  வேலை நிறுத்த போராட்டம்  முடிவுக்கு வந்த பிறகு, தொழிற்சங்கம் கடந்த வாரம் இணைய ஒளிபரப்பு (ஸ்ட்ரீமிங்) தள நிறுவனங்கள் உடன்  பேச்சு வார்த்தைகளை தொடங்கியது. தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க  ஆண்டுக்கு 80 கோடி டாலர்கள் மட்டுமே செலவாகும். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் பிற ஸ்டுடியோக்களின், இயக்கப்படம் மற்றும்  தொலைக்காட்சி தயாரிப்பா ளர்கள் கூட்டமைப்பு இந்த சிறு தொகையைகூட தொழிலாளர்க ளுக்கு வழங்கக்  கூடாது என பிடிவாதமாக மறுத்து வருகிறது.  செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் துணை நடிகர்களு க்கு பதில்  டிஜிட்டல் தொழில் நுட்பத்தை  பயன்படுத்த துவங்கு வது ஒட்டுமொத்த துணை நடி கர்களின் வாழ்க்கையையும் அதல பாதாளத்தில் தள்ளி விடும். “எங்களுக்கு வாழ்க்கை பாதுகாப்பு தேவை”. இந்த போராட்டத்தில் இணைய ஒளிபரப்பு தளங்களுடன்  முறையான ஒப்பந்தத்தை  எட்டாமல் நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவது இல்லை  என்ப தில் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர்.