world

img

மேற்கத்திய நாடுகளின் சதியை முறியடித்த ‘பிரிக்ஸ்’ நாடுகள்!

ஜி-20 உச்சி மாநாட்டில் மேற்கத்திய நாடு களின் சதி அரசியலை, ‘பிரிக்ஸ்’  கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளதாகவும், இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் தெரி வித்துள்ளார். தில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் தன்னால்  கலந்து கொள்ளமுடியாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின், இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார். எனினும், ரஷ்யாவின் சார்பில்  அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்றார். இதனிடையே, மாநாட்டில் சனிக்கிழமையன்று கூட்டுப் பிரகடனம் வெளியிடப் பட்டது. அந்த பிரகடனத்தில், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு கண்டனம் தெரி விக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெ யின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வார் த்தைகளை பிரகடனத்தில் பயன்படுத்த இந்தியா விரும்ப வில்லை. உக்ரைன் போரில்  ஆரம்பம் முதலே இந்தியா நடு நிலை வகித்து வருகிறது. அதேநேரம் இது போருக்கான காலம் கிடையாது என ரஷ்யா விடம் தெரிவித்தது. இதே கருத் தை ஜி-20 உச்சி மாநாட்டி லும் இந்தியா வலியுறுத்தி யது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு போரை நிறுத்த வேண்டும் என்றே கூறியது. இறுதியில் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடப்படாமலேயே கூட்டுப் பிரகடனம் வெளி யானது. இதற்காக, ரஷ்ய வெளி யுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ், இந்தியாவுக்கு நன்றி  தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக தில்லியில் அவர் பேட்டி அளித்துள்ளார். தில்லி ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதி ராக மேற்கத்திய நாடுகள் சதி அரசியலில் ஈடுபட முயற்சி செய்தன. ஆனால் ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டணி நாடுகளான பிரேசில், இந்தியா, சீனா,  தென்னாப்பிரிக்கா ஆகி யவை ரஷ்யாவுக்கு ஆதர வாக செயல்பட்டன. மேற் கத்திய நாடுகளின் சதி அர சியலை இந்தியா வெற்றிகர மாக முறியடித்தது. அதற்காக ரஷ்யாவின் சார்பில் இந்தி யாவுக்கு நன்றியை தெரி வித்து கொள்கிறேன்” என்று  செர்ஜி லவ்ரவ் குறிப்பிட்டுள் ளார்.