world

img

சிலி நாட்டில் பலத்த நிலநடுக்கம்


சிலி நாட்டின் அரவுக்கானியா பகுதியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தி உள்ளது. 

சிலியில் உள்ள அரவுக்கானியா பிராந்தியத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதுகுறித்து சிலி பல்கலைக்கழக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் 
டோல்டன் நகராட்சிக்கு மேற்கே 144 கி.மீ தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் தலைநகர் சாண்டிகோவிலிருந்து 680 கி.மீ தொலைவிடும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. மேலும் 26.5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லாஸ்லாகோஸ் மற்றும் பயோபியோவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால் சிலி கடற்கரையில் சுனாமிக்கான எந்த சாத்தியமும் தென்படவில்லை என்று கடற்படை ஹைட்ரோகிராஃபிக் மற்றும் ஓசியானோ கிராஃபிக் சேவை தெரிவத்துள்ளது. 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

;