கொழும்பு, பிப்.9- வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ள இலங்கையின் திவால் நிலை 2026 ஆம் ஆண்டு வரையில் தொட ரும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள் ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு நாள் வேலை நிறுத்தத்தில் தொழி லாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சே தலைமையிலான ஆட்சியின்போது கடைப்பிடிக்கப் பட்ட மோசமான வலதுசாரிக் கொள் கைகள் இலங்கையை பெரும் நெருக் கடியை நோக்கி அழைத்துச்சென் றது. உணவுப் பொருட்கள், எரிபொ ருள் மற்றும் மருந்துப்பொருட்களு க்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட் டது. மக்கள் வீதிகளில் கொந்தளி ப்புடன் போராட்டங்களை நடத்தி னார்கள். ஜனாதிபதி மாளிகைகளை மக்கள் கைப்பற்றினர். ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு வெளியேறவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். சர்வதேசக் கடன்கள் திரும்பச் செலுத்தப்படவில்லை. இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நி யச் செலாவணி காலியானது. ஐ. எம்.எப்.(சர்வதேச நிதியம்) அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கிடை யில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி தீரா மல் இருப்பதால் மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. தங்கள் பிரச்சனைகளை புதிய அரசு தீர்க்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் சிறிது, சிறிதாக இழந்து வருகின்றனர்.
தற்போது தொடங்கியுள்ள நாடா ளுமன்றக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, “புதிய வரிகளை விதிக்கும் கொள் கையை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்க வில்லை. கடுமையான நெருக்கடி யில் விழுந்துள்ள நாட்டை அதி லிருந்து மீட்பதே என்னுடைய பணி யாகும். நமது திட்டப்படி தொடர்ந்து செயல்பட்டால் 2026 ஆம் ஆண்டில் திவால் நிலையில் இருந்து நம்மால் மீள முடியும்” என்றார். அவரது இந்த உரை நாட்டு மக்க ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கடந்த மாதம் அவர் அளித்த பேட்டியில், “2022 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 11 விழுக்காடு அளவுக்கு சரிவை சந்தித்திருக் கிறது. இலங்கையின் அந்நிய செலா வணி இருப்பு கிட்டத்தட்ட காலியாகி விட்டது. அத்தியாவசியத் தேவை களை வர்த்தகர்களால் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் வருமானத்தைப் பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட நட வடிக்கைகளால் அரசின் வருமானம் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் நிறைவுக்குள் சுமூகமான நிலை ஏற்பட்டுவிடும் “ என்று தெரி வித்திருந்தார்.
வேலை நிறுத்தம்
பொருளாதாரத்தை மீட்பதாகச் சொல்லிக் கொண்டு மக்கள் மீதான சுமையை ரணில் விக்ரமசிங்கே அரசு அதிகப்படுத்தியுள்ளது. எரி பொருளுக்கு இருந்த மானி யங்கள் விலக்கப்பட்டன. வரி உயர் வுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தொழிற் சங்கங்களின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் பங்கேற்றிருக்கிறார்கள். மரு த்துவர்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் மருத்துவத்துறையினரும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்களில் 30 ஆயிரம் பேர் அரை நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருக் கிறார்கள். அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங் கேற்றனர். துறைமுகங்களில் தொழி லாளர்கள் வேலை நிறுத்தங்களில் பங்கேற்றதோடு உணவு இடை வேளையின்போது ஆர்ப்பாட்டமும் செய்தனர். ஐ.எம்.எப். நிபந்தனை களை ஏற்று, அப்பாவி மக்கள் மீது சுமையை ஏற்ற அரசு முயற்சி க்கிறது என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.