பெய்ஜிங், செப்.24- வடகொரிய ஜனாதிபதி கிம் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோரின் சந்திப்பிற்கு பிறகு அமெரிக்காவால் உலக அரசியலில் தூண்டிவிடப்பட்ட பதற்றங்களுக்கு இடையே தென் கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்தார். செப்டம்பர் 26 அன்று சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே சியோலில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க நிகழ்வில் பங்கேற்க வந்த தென் கொரிய பிரதமர் ஹான் டக்-சூவுடன் கிழக்கு சீன நகர் ஹாங்சோவில் நடைபெற்ற சந்திப்பில் ஜி ஜின்பிங் இதை தெரிவித்தார். நான்கு ஆண்டுகளில் இந்நாடுகளின் மூத்த அதிகாரிகள் தலைமையில் நடக்கும் முதல் சந்திப்பு இது. உலக அரசியலில் அமெரிக்காவால் பதற்றம் உருவாக்கப்படும் போது அதை தணிக்கும் விதமாக தென் கொரியாவுடன் ஒத்துழைப்பிற்கு உறுதியளிக்கும் ஆக்கப்பூர்வ விருப்பத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. முக்கிய தருணத்தில் நாக்கை இருக்கும் இந்த உச்சிமாநாட்டை வரவேற்பதாகவும், தென் கொரியாவுக்குச் செல்வது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாகவும் ஜி ஜின்பிங் தென்கொரிய ஜனாதிபதி ஹானிடம் அந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் நட்பு ஒத்துழைப்பை முறையாக பராமரிக்க தென் கொரியா பிரதிநிதிகளை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.