world

img

“அமெரிக்க மக்களுக்கு வறுமை உக்ரைனுக்கு ஆயுதங்கள்”

வாஷிங்டன், ஜூலை 20- அமெரிக்க மக்கள் வறுமையை எதிர்நோக்கியுள்ள சூழலில், மிகவும் கடுமையான நிதிச்சுமையை அவர்கள் தோள்கள் மீது ஏற்றா தீர்கள் என்று அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய- உக்ரைன் போரில்,  அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயு தங்களை வழங்கி வருகின்றன. போர் நிறுத்தத்திற்கான ஆலோசனைகள் பல நாடுகளில் இருந்து வந்த போதிலும் அதை உக்ரைன் ஏற்க  மறுத்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் முட்டுக்கட்டையும் காரணம் என்று பல சர்வதேச அர சியல் வல்லுநர்கள் கருத்து தெரி வித்திருக்கிறார்கள். அடுத்த தவணையாக, 130  கோடி அமெரிக்க டாலர் மதிப்பி லான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இரு நாடு களுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்க வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகிறது. தற்போது போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஏவு கணைகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதத் தள வாடங்களைத் தரப்போகிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படா மல் உக்ரைனுக்கு ஆயுதங்களைக் கப்பல்களில் ஏற்றி அனுப்பு கிறார்கள் என்று அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் கவலை தெரி வித்துள்ளனர். அமெரிக்கா தலைமை யிலான “பனிபோர்” ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக மர்ஜோரி கிரீன் உள்ளிட்ட பல அமெரிக்க நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்  சாட்டியுள்ளனர். இந்தப்  பனிப்போரை உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கித் தொடர்கிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். தொடர்ந்து கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஆயுதங் களை வழங்கி வருவதால் ஆகும் நிதிச்சுமையால் அமெரிக்கப் பொரு ளாதாரத்தின் நெருக்கடி அதிகரிக் கிறது. அந்த நெருக்கடியின் பாதிப்பு களில் இருந்து வெளியேற, நிதிச் சுமை அமெரிக்க மக்களின் தோள் களின் மீது சுமத்தப்படுகிறது என்று  மர்ஜோரி கிரீன் குற்றம்சாட்டியுள் ளார். இத்தனைக்கும் அமெரிக்க மக்களில் கணிசமானோர் வறுமை யின் பிடியில் சிக்கித் தவித்து வரு கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டி னார்.

நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்

புதிய ஆயுதத் தளவாடங்களை பாதுகாப்புத்துறை கூட்டாளிகளோடு இணைந்து அனுப்பப் போகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அவர்கள் கூட்டாளிகள் என்று சொல்வது, அமெரிக்காவில் உள்ள  ஆயுதத் தயாரிப்பாளர்கள் மற்றும் பெரு நிறுவனங்களையே குறிப்பிடு கிறார்கள். அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளுக்கும் இந்த ஆயுதத் தயாரிப்பாளர்கள் நன்கொடைகளை அள்ளித்தருவதால், போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. 

உக்ரைனுக்கு கடும் பாதிப்பு

கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் துறைமுக நகரமான  ஒடிஸ்ஸா மீது இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துள்ளது. உக்ரைனில் மக்கள்தொகையில் மூன்றாவது அதிக எண்ணிக்கையைக் கொண்ட நகரமான ஒடிஸ்ஸாவின் மீது ஆளில்லா  விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை ஏவியும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பிடிவாதத்தால் தாக்குதல்கள் தொடர்கின்றன. பல நகரங்கள் நிர்மூலமாகிக் கிடக்கின்றன. கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. குடியிருக்க வசதியில்லாமல் மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். சொந்த ஊரிலேயே அகதிகளாக முகாம்களில் வசித்து வருகின்றனர்.