world

img

பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு  

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று விபத்தில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.  

பெரு நாட்டின் நாஸ்கா மரியா ரீச் விமான நிலையத்திலிருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் நெதர்லாந்து மற்றும் சிலி நாடுகளை சேர்ந்த 5 பேர், பெரு நாட்டு விமானிகள் 2 பேரை பயணித்தனர்.  இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். 

அதனைதொடர்ந்து விபத்து குறித்து அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;