சாவோ பாலோ நகரில் லூலாவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.
சாவோ பாலோ, அக். 31 - “இன்றைக்கு இந்த உலகிற்குச் சொல்கிறோம், மீண்டெழுந்து விட்டது பிரேசில்; ஒரு மக்கள்விரோதி யின் துயரகரமான, கொடிய ஆட்சி யை தூக்கியெறிந்து மிகப் பெரும் சக்தியாக மீண்டெழுந்துவிட்டது பிரேசில்”. - சாவோ பாலோ நகரில் கூடி யிருந்த பெரும் மக்கள் கூட்டத்தில் இப்படி பிரகடனம் செய்திருக்கிறார், இந்த உலகமே பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில், மகத்தான வெற்றியை ஈட்டியுள்ள அந்நாட்டு உழைப்பாளி மக்களின் மாபெரும் தலைவரான லூலா. பிரேசில் முழுவதும் எளிய உழைப்பாளி மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மீண்டும் லூலா வந்துவிட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவு களைத் தகர்த்து ; ஏகாதிபத்திய கைக்கூலிகளின் கடுமையான போட்டியைத் துவம்சம் செய்து; லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் பாட்டாளி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்கு சிம்மசொப்பனமாக வும் திகழ்ந்து கொண்டிருக்கிற லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார்.
50.90 % வாக்குகள்
தற்போதைய ஜனாதிபதியும் உலகின் அதிதீவிர வலதுசாரி பாசிச வெறிபிடித்த நபருமான ஜெய்ர் பொல்சானரோவை வீழ்த்தி இறுதிக்கட்டமாக 50.90சதவீத வாக்கு களைப் பெற்று 3வது முறையாக ஜனாதிபதி பதவியை கைப்பற்றி யிருக்கிறார் லூலா. 2023 ஜனவரி 1 அன்று அவர் பிரேசிலின் 39வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். ஏற்கெனவே 2003-2011 வரை பிரேசிலின் ஜனாதிபதியாக பெருவாரியான மக்களின் வாக்கு களைப் பெற்று தொடர்ந்து ஆட்சி நடத்தியவர் லூலா. அந்த ஆட்சிக் காலத்தில், அதுகாறும் பிரேசிலின் வளங்களையெல்லாம் கொள்ளை யடித்துக் கொண்டிருந்த ஏகாதி பத்திய ஆதரவு கார்ப்பரேட் கம்பெனி களின் பெரும் சூறையாடலுக்கு முடிவுகட்டினார் லூலா. சாதாரண மெட்டல் தொழிலாளி யாக தனது வாழ்க்கையைத் துவக்கிய லூலா, பிரேசில் நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடி மக்களின் மகத்தான தலை வராக உயர்ந்தார். சோசலிச சிந்த னைகளை தாங்கி, தொழிலாளர் கட்சி யை (பி.டி.) நிறுவிய தலைவர்களில் ஒருவர் இவர். தொழிலாளர் கட்சி நடத்திய எண்ணற்ற போராட்டங் களுக்கு தலைமையேற்றவர்.
2011இல் லூலாவின் ஆட்சிக்கு எதி ராக அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கைக்கூலிகளை களமிறக்கியது. கலவரங்களை நடத்தியது. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மீண்டும் தொழி லாளர் கட்சி வென்றது. லூலாவைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவரான டில்மா ரூசெப் ஜனாதி பதியாக பொறுப்பேற்றார். அவரது ஆட்சியையும் கவிழ்க்க ஏகாதி பத்தியம் சூழ்ச்சிகளை அரங்கேற்றி யது. அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகாலமாக பிரேசிலில் அமெரிக்க கைக்கூலியான பொல் சானரோவின் ஆட்சி நடைபெற்று வந்தது.
அமெ. ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகள்
இத்தகைய பின்னணியில்தான் நடப்பு ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக மாறியது. லூலாவா, பொல்சானரோவா என்ற கேள்வி சர்வதேச ஊடகங்களில் முக்கியத்து வம் பெற்றது. மீண்டும் பொல்சான ரோவை வெற்றிபெறச் செய்வதற் காக அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு வீச்சில் களமிறங்கியது. ஆனால் 5ஆண்டுகால பொல்சானரோவின் ஆட்சி, அவரிடமிருந்து அந்நாட்டு மக்களை அந்நியப்படுத்தியிருந்தது. புவிக்கோளத்தின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடு களை தனியார் பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றுவதற்கு பொல்சானரோ தனது ஆட்சியில் அனுமதி அளித் திருந்தார். நவீன தாராளமயக் கொள்கைகள் அதிதீவிரமாக அமலா க்கப்பட்டன. எளிய மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொல்சானரோ ஆட்சி மக்களைக் காக்கும் திராணியின்றி பகிரங்கமாக அம்பலப்பட்டு நின்றது. லட்சக்கணக்கான மக்களின் உயிர் பறிபோனது. அதைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல், மக்களின் மரணங்களை இழிவுபடுத்திக் கொண்டிருந்தார் பொல்சானரோ.
இவை அனைத்தும் இந்தத் தேர்தலில் பிரதிபலித்தது. பிரேசில் உழைப்பாளி வர்க்க மக்களின் நல னை முன்னிறுத்தி, பொல்சானரோ ஆட்சியின் துயரங்களை அம்பலப் படுத்தி தேர்தலை எதிர்கொண்டது தொழிலாளர் கட்சி. உள்நாட்டுப் பிரச்சனைகள் மட்டுமின்றி, உலக அளவில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் பிரேசில் எப்படி தனிமைப்பட்டு நிற்கும் அவலம் நேர்ந்தது என் பதைப் பற்றியும், சர்வதேச அரசியல், உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து பிரச்ச னைகளிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலுக்கு உள்ள முக்கியத்துவம் பொல்சான ரோ ஆட்சியில் எப்படி வீழ்ச்சி அடைந்தது என்பதைப் பற்றியும் தனது பிரச்சாரத்தில் விரிவாக முன்வைத்தார் லூலா. பிரேசில், லூலாவின் பிரச்சா ரத்தை உன்னிப்பாகக் கேட்டது. மீண்டும் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தது. லூலாவின் வார்த்தைகளில், பிரேசில் மீண்டெழுந்துள்ளது.
உணர்ச்சி மிகு உரை
“பிரேசிலின் இறையாண்மை யை தற்போது மீட்டிருக்கிறோம். இறையாண்மை மிக்க பிரேசிலை கடந்த சில ஆண்டுகளாக இந்த உலகம் இழந்திருந்தது. மீண்டும் பிரேசிலின் நம்பிக்கையை, அரசி யல் நிலைத்தன்மையை, அதன் மூலம் உலக அளவில் உள்ள உற் பத்தி முதலீட்டாளர்களின் நம்பிக்கை யை நாங்கள் நிச்சயம் பெறுவோம். எங்கள் நாடு அளவில்லாத லாபத்தை கொள்ளையடித்துச் செல் வதற்கான இடம் அல்ல என்பதை நிச்சயம் நிலைநாட்டுவோம். எங் களது கூட்டாளிகளுடன் இணைந்து எங்களது ஒட்டுமொத்த சமூகங் களின் பொருளாதார வளர்ச்சியை யும் சுற்றுச்சூழல் நிலைமைத் தன்மையையும் நிச்சயம் உறுதி செய்வோம்” என்று, வெற்றிக்குப் பிறகு சாவோ பாலோ நகரில் மக்களி டையே உரையாற்றிய லூலா குறிப்பிட்டார்.
“உலகில் பட்டினிக்கு எதிரான போராட்டத்தில் பிரேசில் மீண்டும் தன்னை முழுவீச்சில் இணைத்துக் கொள்ளும்; காலநிலை மாற்றம் எனும் பயங்கரத் திற்கு எதிரான போராட்ட த்தில் மீண்டும் பிரேசில் தனது முதன்மையான பங்கினை ஆற்றும்; குறிப்பாக அமேசான் மழைக் காடுகளை முழுமையாக, நிச்சயமாக பாதுகாப் போம்” என்றும் லூலா முழங்கினார்.
அமேசானின் உயிரைக் காப்போம்
“அமேசான் காடு களை முழுமையாக அர சாங்கத்தின் கண்காணிப் பிற்கு கொண்டுவருவோம், ஒரு சிறு சட்டவிரோத நட வடிக்கையைக் கூட அந்தக் காட்டில் அனுமதிக்க மாட்டோம்; சுற்றுச்சூழலை அழிக்காமல், அனைத்து சமூகங்களுக்குமான நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி, மக்களின் வாழ்வா தாரங்களை மேம்படுத்துவோம். எங்களது இறையாண்மையை எந்தவிதத்திலும் சமர சம் செய்து கொள்ளாமல், சர்வதேச ஒத்து ழைப்புடன் அமேசான் காடுகளை முழுமை யான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெட்டகமாக இருப்பதை உறுதிசெய்வோம்” என்றும் லூலா கூறினார். “பிரேசிலுக்கும் இந்தப் புவிக்கோளத் திற்கும் உயிர்ப்புமிக்க அமேசான் காடுகள் அவசியத் தேவை; சட்டவிரோதமாக அறுத் தெடுக்கப்படும் பல டன் மரங்களைவிட உயிருடன் நின்று கொண்டிருக்கும் ஒரே ஒரு மரம் நமக்கு முக்கியம்; இந்தக் காட்டிற்குள் உயிரினங்களைக் கொன்று, பாதரசத்தை விதைத்து பிரித்தெடுக்கப்படும் தங்கத்தைவிட சுத்தமான தண்ணீர் ஓடும் ஓர் ஆறு நமக்கு முக்கியம். சுற்றுச்சூழலை எந்தவொரு அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பதற்கு தயாராக உள்ளோம்” என்றும் லூலா தனது உரையின்போது குறிப்பிட்டார்.
பட்டினிக்கு முடிவுகட்டுவோம் !
“பிரேசிலில் எமது அவசரமான கடமை, எமது மக்களின் பட்டினியை முடிவுக்கு கொண்டுவருவதே; லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பட்டினியில் உழல்வது என்பது சமீப ஆண்டு களாக சர்வ சாதாரணமாக மாறியிருக் கிறது; குழந்தைகளுக்கு புரதச்சத்து கிடைக்க வில்லை; இதில் நகைமுரண் என்ன வென்றால் பிரேசில்தான் உலகிலேயே மூன்றாவது பெரிய உணவு உற்பத்தியாளர்; உலகிலேயே முதல்பெரிய இறைச்சி உற்பத்தி செய்யும் நாடு என்பதும்தான்” என்றும் லூலா குறிப்பிட்டார். “உலகம் முழுவதற்கும் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்கிற சக்தி பிரே சிலுக்கு உள்ளது. ஆனால் இங்கே உள்ள ஒவ்வொரு பிரேசிலியருக்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதுதான் எனது அரசா ங்கத்தின் முதல் முக்கிய கடமை. நமது நாட்டில் பல நகரங்களில் ஒட்டுமொத்த குடும்பமும் வீதிகளில் உறங்க வேண்டிய அள விற்கு வீடில்லாத அவலம் நீடிக்கிறது. உணவை உறுதிசெய்வதைத் தொடர்ந்து முதன்மையான கடமையாக எனது வீடு வாழ்க்கை என்ற திட்டத்தை அமலாக்கு வோம். பிரேசில் மக்களிடையே நிலவும் சமத் துவமின்மையை, வறுமையை தகர்த்தெறி வோம்” என்றும் லூலா முழங்கினார்.
(டெலிசூர்)