பிரேசிலியா, ஜன.2- தனக்கு முந்தைய ஜெய்ர் போல்சானரோ தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்குலைவு நடவடிக்கைகளை திரும்பப் பெறுவோம் என்று பிரேசிலின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா தெரிவித்துள்ளார். 2022 அக்டோபர் 2, அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் லூலா வெற்றி பெற்றார். தனது பிரச்சாரத்தின்போது, பிரேசிலின் மதிப்பை மீட்டெடுப்போம் என்று உறுதி அளித்திருந்தார். பொரு ளாதார நிலைமை படுமோசமானது. வறுமை யில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதி கரித்தது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. மக்கள் அவதிப்பட்டனர். 2023 ஜனவரி 1, அன்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட லூலா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அவரது உரை பெரும்பாலும் ஒற்றுமை மற்றும் மறுகட்டமைப்பைச் சுற்றியே இருந்தது. அரசியல் ரீதியாக செங்குத்துப் பிளவுடன் பிரேசில் பொது சமூகம் இருப்பதால், இந்த வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதேவேளை யில், முந்தைய அரசின் மோசமான கொள்கைகளைத் திரும்பப் பெறுவதோடு, வறுமை, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சனைகளில் தனது முந்தையப் பதவிக்காலத்தில் இருந்த நிலைமையைத் திரும்பக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்திருக்கிறார். 2030-ஆம் ஆண்டுக்குள் அமேசான் வனப்பகுதிப் பாதுகாப்பை முழுமை யாக்குவோம் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் பிரச்சனையைக் கையாள சுற்றுச்சூழல் போராளியான மரினா சில்வா அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் லூலா ஜனாதி பதியாகப் பொறுப்பேற்றும் நிகழ்வில் பங் கேற்றனர். ‘‘வெறுப்பை வென்றது அன்பு’’ என்று எழுதப்பட்ட பதாகைகளோடு அவர் கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினார்கள்.