நியூயார்க், டிச. 29 - 2024 புத்தாண்டு பிறப்பையொட்டி, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனி யோ குட்டரெஸ், காணொலி உரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச அளவில் புதிய பிரச்சனை களாக எழுந்துள்ள சவால்கள்- அர சியலில் உருவாகியுள்ள நெருக்கடி கள் குறித்தும், உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் வறுமையிலும் பசியிலும் வாடுவது குறித்தும் வேதனை தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு மிக மோசமான துன்பங்களும், வன்முறைகளும் மற்றும் காலநிலை மாற்றங்களால் உருவான பேரிடர்களும் நிறைந்த ஆண்டாக இருந்தது என்றும், இதனால் மனிதகுலம் மிகுந்த வேத னையை அனுபவித்தது என்றும், தற்போதைய சூழலில் காலநிலை மாற்றங்களால் பூமிக் கிரகமே ஆபத்தில் உள்ளது என்று கூறி யிருக்கும் குட்டரெஸ், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே 2023-தான் மிகவும் வெப்பமான ஆண்டாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசியிருக்கும் குட்ட ரெஸ், “லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து வறுமை மற்றும் பசி யால் துன்பப்பட்டு வருகின்றனர். போர்ச் சூழலும் தீவிரமாக அதி கரித்து வருகின்றது. இதனால் நாடு களிடையேயும், மக்களுக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது; போரில் ஈடுபடுவதும், மற்றோரு வரை விரல்களை நீட்டியோ, துப்பாக்கிகளை காட்டியோ மிரட்டுவதோ பயன் தராது; நாம் ஒன்றாக நிற்கும்போதுதான் மனித நேயம் வலிமையாக இருக்கும்; அந்த வகையில் 2024-ஆம் ஆண்டு நம்பிக்கையை மீண்டும் கட்டி யெழுப்புவதற்கும் மீட்டெடுப்ப தற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டாக இருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார். “காலநிலை மாற்றம், பொரு ளாதார வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவது அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சமமான உலகளாவிய நிதி அமைப்பை உருவாக்குவது என வேறுபாடுகளால் உருவாகியிருக்கும் பிளவுகளை நாம் ஒன்றிணைக்க வேண்டும். குறிப்பாக பாகுபாடுகள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், இந்த வேறுபாடு களால் நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. அமைதி, நிலையான வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்காக உலகை அணிதிரட்டுவதில் ஐ.நா. சபை உறுதியாக உள்ளது. 2024-ஆம் ஆண்டை நம்பிக்கை யை வளர்க்கும் ஆண்டாக மாற்ற உறுதி கொள்வோம்” எனவும் குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.