world

img

62ல் இருந்து ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதா?

பாரிஸ், ஜன.12- ஓய்வு பெறும் வயதை 62இல்  இருந்து 65 ஆக உயர்த்துவதை பிரான்ஸ் நாட்டுத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதில் இருந்து தீவிரமாக வலதுசாரிக் கொள்கை களை நடைமுறைப்படுத்துவதில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானு வேல் மக்ரோன் மும்முரமாக இருக்கிறார். அமெரிக்காவைப் பின்பற்றி ரஷ்யா மீது பொரு ளாதாரத் தடைகளைப் போட்டனர். அந்தத் தடைகள் ரஷ்யாவைப் பாதித்ததைவிட, பிரான்சிற்கே அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் நிறுவனங்கள் திணறிக் கொண்டி ருக்கின்றன. இந்நிலையில்தான் தொழிலாளர்களுக்கு பெரும் நெருக்கடியைத் தரப்போகும் ஓய்வூதிய வெட்டை நடைமுறைப் படுத்துவதில் மும்முரமாக உள்ள னர். முதல் நடவடிக்கையாக, ஓய்வு பெறும் வயதை உயர்த்துகிறார்கள். முழு ஓய்வூதியம் வேண்டும் என்றால், உயர்த்தப்பட்ட வயது வரையில் வேலை பார்த்தால்தான் கிடைக்கும். இது குறித்த முழு விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், 64 அல்லது 65 வயதாக நிர்ணயிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் காரணம் என்ன வென்றால், மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துவிட்டது என்பதாகும். அதனால், ஓய்வூதியத்தைத் தர முடியாமல் போகிறது என்கிறார்கள். ஓய்வூதியத்திட்டத்தைத் தொடர வேண்டுமானால், வயதை உயர்த்துவதைத் தவிர வேறில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை யும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

பிரான்ஸ் நாட்டின் ஒவ்வொரு தொழிலாளியும் அரசு ஓய்வூதியம் பெறுகிறார். இதைக் காலி செய்வதே வலதுசாரிகளின் நோக்க மாக உள்ளது. அரசின் இந்த  நாசகரத் திட்டத்திற்கு இடதுசாரி  அமைப்புகளும், தொழிற்சங்கங் களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஓய்வூதியத்தை மறுக்கும் எந்த வித மாற்றத்தையும் தங்களால் ஏற்றுக் கொள்ள முடி யாது என்று இந்த அமைப்புகள் உறுதிபடக் கூறியிருக்கின்றன. கடுமையான போராட்டங்களை நடத்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இருக்காது என்றும் எச்சரித்துள்ளன. நிராகரிப்பு ஜனாதிபதி மக்ரோனின் தொழி லாளர் விரோதத் திட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்த பிரதமர் எலிசபெத் போர்ன்  முனைந்துள்ளார். தொழிற்சங்கங் களுடன் அவர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளது. தொழிலாளர்களைப் பாதிக்கும் எந்த அம்சத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமரிடம் தொழிற்சங்கங்கள் தெளிவாகக் கூறிவிட்டன. தொழிலாளர்களைப் பாதிக்கும் அம்சங்களை நாங்கள்  நிராகரிக்கிறோம் என்று பேச்சு வார்த்தையின்போதே தெரிவித்து விட்டார்கள். நிறுவனங்கள் தரப்பிலான பங்களிப்பை அதிகப் படுத்தலாம் என்றும் சில தொழிற் சங்கங்கள் கருத்து கூறியுள்ளன. பிரான்சின் பெரிய எட்டு  தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. அரசின் இந்த தொழி லாளர் விரோதத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தேதியையும், எத்தகைய போராட்டங்கள் என்பதை யும் நிர்ணயிக்க ஆலோசிக்கிறார் கள். நாடாளுமன்றத்திலும் கடும்  எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.