world

img

யுனெஸ்கோவில் இருந்து வெளியேறியது தவறு

வாஷிங்டன், ஜூன் 24- ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பில் மீண்டும் சேர்வ தற்கான முயற்சிகளில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முனைப்புடன் இருக்கிறது. யுனெஸ்கோவின் செயல்பாடுகளில் அமெ ரிக்கா கடும் அதிருப்தியுடன் இருப்பதாகப் பல ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. 2011-ஆம் ஆண்டில் யுனெஸ் கோவிற்கு நிதி தர முடியாது என்று அப்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமா தலைமையிலான அரசு திட்டவட்டமாகக் கூறியது. அப்போதிலி ருந்து தற்போது வரையில் அமெரிக்காவிடமி ருந்து ஒரு டாலர் கூட யுனெஸ்கோவிற்கு கிடைக்க வில்லை. உருவாகி வரும் புதிய சூழலில் யுனெஸ் கோவில் இருந்து வெளியேறிய முடிவு தவறா னதோ என்று விவாதம் நடைபெற்று வருகிறது. 2011-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட நிதியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 50 கோடி யூரோக்களை அமெரிக்கா கட்ட வேண்டி வரும். முழுமையான உறுப்பினர் என்ற அந்தஸ்து  வேண்டும் என்றால் இந்த 50 கோடி யூரோக்க ளைக் கட்டியாக வேண்டும். இதற்கான நிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது.

ஆனால், இதுவரையில் நிதி எதையும் கட்டவில்லை. அந்நாட்டின் ஊடகச் செய்திகளின் படி, ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் செயல்திட்டத் தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை தடுக்க யுனெஸ்கோவில் மீண்டும் சேருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாக தெரிகிறது. இந்த கருத்தை அமெரிக்காவின் துணை அமைச்சர்களில் ஒருவரான ஜான் பாஸ் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் பேசுகையில், ‘‘யுனெஸ் கோவில் மீண்டும் சேருவதால் உலக அளவில் போட்டியாளராக இருக்கும் சீனாவை எதிர் கொள்ள இயலும். இந்த அமைப்பில் சீனா ஏராள மான அளவில் முதலீடு செய்திருக்கிறது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியில் எந்தவொரு இடத்திலும் நாங்கள் இல்லாமல் இருப்பது சரியில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் யுனெஸ்கோவில் நாங்கள் இருந்தேயாக வேண்டும்’’ என்றார்.

ஓரிரு வாரங்களுக்கு முன்பாக யுனெஸ்கோ வின் நிர்வாகத்தைத் தனிப்பட்ட முறையில்  அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டி ருக்கிறார்கள். மீண்டும் யுனெஸ்கோவில் இணை ந்து செயல்படுவதற்கான வாய்ப்பை விரைவு படுத்த விரும்பியுள்ளனர். யுனெஸ்கோவைப் பொறுத்தவரையில், எந்த நாட்டையும் தங்கள் அமைப்பை விட்டு வெளியேற்றவில்லை. மீண்டும் இணைவதை அவர்கள் வரவேற்கவே செய்கி றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காதான் எதிர்மறை அணுகுமுறை யைக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் புதிய சூழல் உருவாகியுள்ளது. செயற்கை நுண்ண றிவுத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கான கல்வித்திட்டத்தில் யுனெஸ்கோவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ‘‘அந்த இடத்தில் நாங்கள் இல்லாததை உணர முடிகிறது. நாங்கள் இல்லையென்றால், வேறு யாரோ அந்தக் கல்வித்திட்டத்தை வடிவமைக்கிறார்கள். இங்கு, அது சீனாவாக இருக்கிறது’’ என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்க்கன் கூறியிருக்கிறார்.

முதன்முறையல்ல

2018-ஆம் ஆண்டில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது வெளியேறுவதாக அறிவித்தார்கள். யுனெஸ்கோவை விட்டு அமெரிக்கா வெளியேறுவது இது முதன்முறை இல்லை. ரொனால்டு ரீகன் அந்நாட்டின் ஜனாதி பதியாக இருந்தபோது 1984-ஆம் ஆண்டில் மோச மான நிர்வாகம் மற்றும் ஊழல் நிறைந்தது என்று  கூறி வெளியேறியது. அதன்பின்னர் 2003-ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்தது. ஆனால், யுனெஸ்கோ வுடன் முழுமையான ஒத்துழைப்போடு பணியாற்ற வில்லை. பல்வேறு விஷயங்களில் முரண்பட்டே அமெரிக்கா நடந்து கொண்டது. தருவதாக ஒப்புக் கொண்ட நிதியைத் தராமல் இழுத்தடித்தே வந்தி ருக்கிறது.