ஜோர்டான் எல்லையில் சுவர் கட்டப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஜோர்டான் எல்லையில் சுவர் கட்டப்போவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ள ஜோர் டான் பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட சென்ற போது இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜோர்டான் இடையேயான எல்லையில் வரும் மாதங்களில் சுவர் கட்டத் துவங்க உள்ளோம் எனவும் இந்த பணியை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
உக்ரைன் போருக்காக 800 பில்லியன் திரட்டும் ஐரோப்பிய நாடுகள்
நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்திற்கு அமெரிக்கா செலவு செய்ய மறுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் ராணுவத்திற்காக 800 பில்லியன் யூரோ செலவு செய்ய திட்டமிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவத்திற்காக ஐரோப்பிய ஆணையம் 150 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய போரில் உக்ரைனின் ராணுவத்திற்கு தேவையான உதவியை செய்வதாக ஐரோப்பிய தலைவர்கள் உறுதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸுக்கு மீண்டும் சுவாசப் பாதையில் பாதிப்பு
மருத்துவமனையில் நிமோனியா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு மீண்டும் சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வாடிகன் செய்தி தெரிவித்துள்ளது. மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் அரசியலமைப்பை மாற்ற புதிய குழு அமைப்பு
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) பயங்கரவாதிகள் படை ஜோர்டான், இஸ்ரேல், அமெரிக்கா உதவியுடன் அசாத் தலைமை யிலான சிரியா அரசை ஆட்சியிலிருநது கவிழ்த்தது. எச்டிஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல்-ஷாரா இடைக்கால ஜனாதிபதியாக பொறுப் பேற்றார். இவர் அந்நாட்டின் அரசமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கொண்ட “நிபுணர்கள் குழுவை” அறிவித்துள்ளார். இக்குழு எப்போது முன்மொழிவுகளை ஜனாதிபதி யிடம் சமர்ப்பிக்கும் என காலவரையறை நிர்ணயிக் கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு போரை துவங்க நேதன்யாகு திட்டமிடுகிறார்
காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரை நேதன்யாகு மீண்டும் துவங்க திட்டமிடுகிறார் என ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஹம்தான் குற்றம் சாட்டியுள்ளார். போர் நிறுத்தத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. மேலும் நேதன்யாகு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்து தற்போது அமெரிக்க முன்மொழிவுகளை அமல்படுத்த நினைக்கின்றார் எனவும் விமர்சித்துள்ளார்.
அதிக வரிவிதித்த அமெரிக்காவுக்கு சீனா பதிலடி : 25 நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு மற்றும் இறக்குமதி வரி விதிப்பு
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகை யில் அந்நாட்டின் விவசாய மற்றும் பண்ணை உற்பத்திப் பொருட்கள் மீது கூடுதலாக 10–15 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படு வதாக சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் தைவானுக்கு ஆயுதங்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் உட்பட 25 நிறுவ னங்கள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பேன் என அறிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இந்த இரு நாடுகள் மட்டுமின்றி தொழில் நுட்ப உலகில் தங்களுக்கு மிகப்பெரும் போட்டியாக வளர்ந்து நிற்கும் சீனா மீதும் 10 சதவீத வரியை விதிப் பேன் என டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெ ரிக்கப் பொருட்கள் மீது 10 சதவீதம் வரி விதித்து இருந்தது. தற்போது செவ்வாய்க்கிழமை முதல் இவ்வரிகள் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா மேலும் 10-15 சதவீத வரியை விதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன், சோளம், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, கடல் உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட விவசாய மற்றும் பண்ணைப் பொருட்களின் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் மார்ச் 10 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் விவசாய மற்றும் பண்ணைப் பொருட்களுக்கு சீனா 10 சதவீதம் வரை வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை அறிவித்தார். அமெரிக்கா இந்த வரிவிதிப்பை திரும்பப் பெறும் வரை எங்கள் வரி நடைமுறையில் இருக்கும். அமெரிக்கா வரிகளை நீக்காவிட்டால் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் முதல்முறை வரியை அறிவித்தபோது அவரு டன் பேச்சுவார்த்தை நடத்திய மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தற்போது மிகவும் அமைதியான முறையில் தனது நாட்டின் மீது வரி விதிக்கப்பட்டால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.