world

img

உலகத்தரத்தில் பொருட்கள் உற்பத்தி வியட்நாமில் புதுமை முயற்சி

மிகவும் உயர் தரமுள்ள பொருட்களை உற்பத்தி செய்ததற்கான வியட்நாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சோசலிச வியட்நாமில் மக்களுக்குக் கிடைக்கும் பொருட்களின் தரத்தை உத்தரவாதப்படுத்த பல முயற்சிகள் நடைபெறுகின்றன. பொதுவாக, பல நாடுகளில் ஏற்றுமதிப் பொருட்களுக்கும், இறக்குமதிப் பொருட்களுக்கும் இடையிலான தரம் பெரிய அளவில் வேறுபட்டு நிற்கிறது. வியட்நாமிலும் இந்த நிலைமை இருந்ததால், அந்நாட்டின் அரசு இந்த இடைவெளியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. அதன் அடிப்படையில், சந்தையில் தர அடிப்படைடியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
பொருட்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று அரசு தர நிர்ணயம் செய்துள்ளது. அதோடு, அவற்றை மதிப்பீடு செய்யும் பணியை மக்களிடமே விட்டிருக்கிறார்கள். நவம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரையில் இதற்கான ஆய்வு நடந்திருக்கிறது.  2 ஆயிரத்து 830 நிறுவனங்களின் பொருட்கள் இந்த ஆய்வுக்கான எடுத்துக் கொள்ளப்பட்டன. இதிலிருந்து 524 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மக்களின் கருத்தோடு, 77 அரசுத்துறைகளின் பரிந்துரைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த நிறுவனங்களின் பொருட்களுக்கு "மிக உயர்தர பொருள்" என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களில் இந்த முத்திரை பொறிக்கப்பட்டு சந்தையில் விற்பனை அவர்கள் வைத்துக் கொள்ளலாம். மக்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தங்களது விருப்பத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதோடு, எந்தப் பொருட்கள் வேண்டும் என்று தாங்கள் நினைக்கிறோமோ அந்தப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்வதில் உள்நாட்டு நிறுவனங்களுக்கிடையில் போட்டி உருவாகியுள்ளது. குறிப்பாக, அரசு நிறுவனங்கள் தரத்தை முன்னிறுத்த இந்தப் போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டன. வினாமிக், வினாமிட் ஐஎஸ்சி, வியெட் டியான் ஜவுளிக்கழகம், பு ஹுவான் நகை நிறுவனம் உள்ளிட்டவை இந்த 524 நிறுவனங்கள் உள்ள பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.