world

img

சுதந்திர நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அதிகரிப்பு

டெஹ்ரான், ஜூன் 14- பல்வேறு நாடுகளுக்கிடையில் உருவாகி வரும் ஒத்துழைப்பு புதிய உலக சூழல் உரு வாகி வருவதையே காட்டுவதாக தென் அமெ ரிக்க அரசியல் ஆய்வாளர்கள்தெரிவிக்கிறார்கள். அண்மையில் அரபு லீக்கில் பத்தாண்டு களுக்குப் பிறகு மீண்டும் சிரியா உறுப்பினராக இணைந்துள்ளது. உள்நாட்டுப் போரை முடி வுக்குக் கொண்டு வந்துள்ள சிரியா, அந்நிய சக்தி களை எதிர்கொள்ள அரபு லீக்கில் இணைந் திருப்பது பெருமளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியாவும், ஈரானும் சீனாவின் முன்னெடுப்பால் பரஸ்பர  பேச்சுவார்த்தை நடத்திப் பல்வேறு உடன்பாடு களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த இரு நாடு களும் மீண்டும் சுமூகமான உறவை இவ்வளவு விரைவில் எட்டும் என்பதை பலரும் எதிர்பார்க்கவில்லை. ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காதான் முட்டுக் கட்டையாக இருப்பதைத் தொடர்ந்து ஈரான் அம்பலப்படுத்தியிருக்கிறது. பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்திருந்தாலும் ஈரானின் வளர்ச்சி தடைபடவில்லை.

அதன் ஏற்று மதி மற்றும் இறக்குமதியில் பெரும் தடைகளை அமெரிக்காவால் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, ஈரான் கடந்த ஆண்டுகளை விட கூடுதல்  வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் செயல்பாடு கள் பல நாடுகளில் அத்தியாவசியத் தேவை களை நிறைவேற்றும் வகையில் அமைந்துள் ளது. உணவு தானியங்கள் மற்றும் மருந்து களைப் பல்வேறு நாடுகளுக்கு சீனா அனுப்பி யுள்ளது. சீன மருத்துவர்கள் பல ஆப்பிரிக்க நாடுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு முகாமிட்டு சிகிச்சைகளை அளித்துள்ளனர். சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை எந்தவிதக் கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல், தனது நிதியிலேயே சீன அரசு செய்து தந்துள்ளது. மேலும் பல ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ரஷ்யா-சீனா-ஈரான் ஆகிய நாடுகளுக்கிடை யில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு உலக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதென இந்த நாடுகள் முடிவெடுத்துள் ளன. உக்ரைனில் மோதலைத் தூண்டிவிட்டு, ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. நேட்டோ விரிவாக்கத்தை மட்டுமே குறியாகக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு, பல நாடுகள்  சுதந்திரமாகத் தங்கள் வெளிநாட்டுக் கொள்கை களை நடைமுறைப்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட  பிரிக்ஸ் அமைப்பு புதிய உலக சூழலை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேருவதற்கு ஈரான், அர்ஜெண்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. புதிய நாடுகளை உறுப்பினர்களாக ஆக்கு வதற்கான விவாதம் பிரிக்ஸ் அமைப்பில் இன்னும் தொடங்கவில்லை. புதிய உறுப்பினர் களைச் சேர்ப்பது பெரும் அளவில் வலுவான அமைப்பாக பிரிக்ஸ் உருவாகும்.  ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி, வெனி சுலா, நிகரகுவா மற்றும் கியூபா ஆகிய  மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு  வருகிறார். ஈரானைப் போலவே அமெரிக்கா வின் தடைகளை இந்த நாடுகளும் எதிர்கொண்டுள்ளன. வேறு எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக இந்த நாடுகள் முடிவெடுக்கப் போகின்றன என்று பொலிவியா வின் ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரு மான ஸ்டென்கா சாவேத்ரா அல்பரோ தெரிவித்துள்ளார்.