புதிய ரக ஏவுகணை
புதிய விமானப்படைத் தளத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த அதே வேளையில், அந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலேயே ஆசெப் என்ற புதிய நீண்ட தொலைவு இலக்கைத் தாக்கும் ஏவுகணையும் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிரிகளின் வலுவான தளங்களைத் தாக்கி அழிக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு இருக்கிறது. ஈரானைச் சேர்ந்த வல்லுநர்களால், உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. போர் விமானமான சுகோய்-24இல் இந்த ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது.
டெஹ்ரான், பிப்.8- நிலத்தடியில் விமானப் படைத் தளம் ஒன்றை உருவாக்கிவிட்டோம் என்று ஈரான் ராணுவம் அறிவித்த தோடு அது தொடர்பான படங் களையும் வெளியிட்டிருக்கிறது. ஈகிள்(கழுகு) 44 என்று பெய ரிடப்பட்டுள்ள இந்த விமானப் படைத்தளத்தை ராணுவ உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் முக மது பகேரி, மேஜர் ஜெனரல் அப்துல் ரகீம் மவுசாவி ஆகிய இருவரும் பார்வையிட்டனர். அதன்பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த அவர்கள், ‘‘இஸ்ரேல் உள்ளிட்ட எதிரிகள் தாக்கினால், கழுகு 44 விமானப் படைத்தளம் உள்ளிட்ட அனை த்துத் தளங்களில் இருந்தும் எதிர்த் தாக்குதல் நடத்தப்படும்’’ என்றார். இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய தகவல்களை ராணு வம் வெளியிடவில்லை. புதிய படைத்தளத்தில் குண்டு களை வீசக்கூடியவை உள்ளிட்ட அனைத்து வகை போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் ஆகி யவை வைக்கப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு இங்கு அவற்றை வைத்து, பராமரிக்கும் அளவுக்கு அந்தத் தளத்தில் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். ஈரானில் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள முதல் விமானப் படைத்தளம் இது வாகும். உள்நாட்டுப் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு இந்தத் தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மலைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில் விமானங்களை நிறுத்து வதற்கான பெரிய கொட்டகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. விமானங்களைச் சரி செய்வதற் கான மற்றும் பராமரிப்பதற்கான வசதிகளும் உள்ளன. அனைத்து வகையான விமானங்களையும் இந்தத் தளத்தில் வைத்துக் கொள்ளும் அளவிலான ஏற்பாடு கள் இருக்கின்றன. தற்போதுள்ள எண்ணிக்கையை விட கூடுதலாக வும் விமானங்களை அங்கு கொண்டு வர முடியும். மோதல்கள் ஏற்பட்டால் மிகவும் வலுவுடன் எதிர்த்தாக்குதல் நடத்து வதற்கு ‘கழுகு-44’ உதவும் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறி யுள்ளன.
இத்தகைய தாக்குதல்கள் மற்றும் எதிர்த்தாக்குதல்கள் ஈரானால் நடத்த முடியும் என்று எதிரிகள் எதிர்பாராத அளவிற்கு இந்த நிலத்தடி படைத்தளங்கள் இருக்கும் என்று மேஜர் ஜெனரல் முகமது பகேரி கூறியிருக்கிறார். ‘‘313’’ ஏற்கனவே, ‘‘ஆளில்லா விமானத்தளம் 313’’ என்ற தளம் ஒன்றையும் ஈரான் விமானப்படை உருவாக்கியுள்ளது. இதுவும் நிலத் தடியில்தான் அமைக்கப்பட்டிருக் கிறது. இந்த விமானங்கள் சிறிய தாக இருக்கும் என்பதால் ‘கழுகு-44’ தளம் அளவிற்கு நிலப்பரப்பு தேவைப்படவில்லை. ஆனால், போர்க்காலத்தில் மிகவும் முக்கிய மான பங்கை இந்த நிலத்தடி ஆளில்லா விமானத்தளம் வகிக்கும் என்று விமானப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய விமானப்படைத் தளங்களை உருவாக்குவதற்கு முன்பாக தங்கள் ஏவுகணை களைப் பத்திரமாக வைத்திருக்க, நிலத்தடி யில் தளங்கள் அமைக்கப்பட்டன. மார்ச் 2021இல், ஏவுகணைகளைப் பாதுகாக்க முதன்முறையாக ஈரான் ராணுவம் நிலத்தடியில் ஒரு தளத்தை அமைத்தது. தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து ஈரான் அதிகரித்து வந்திருக்கிறது. தனது வர்த்தகக் கப்பல் ஒன்றை அமெரிக்கா முற்றுகையிட்டு, கடத்திச் சென்றபோது ஈரானின் ஹெலிகாப்டர்கள் தலையிட்டு அமெரிக்கக் கப்பலை விரட்டின என்பது குறிப்பிடத்தக்கது.