வாஷிங்டன், ஏப்.27- கொரோனா பெருந்தொற்று காலத்தில் 6 கோடி துப்பாக்கிகள் அமெரிக்காவில் விற்பனை ஆகின என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் ஏப்ரல் 10 ஆம் தேதிக் கணக்குப்படி 11 ஆயிரத்து 523 பேர் துப்பாக்கி வன்முறைக்குப் பலியாகி யுள்ளனர். கூட்டத்தின் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுகளின் எண்ணிக் கையே 160ஐத் தாண்டுகிறது. கொரோனா பெருந்தொற்று கால மான 2021 ஆம் ஆண்டில் 48 ஆயிரத்து 830 பேர் துப்பாக்கிக்குப் பலியா னார்கள். இதில் தற்கொலைகளும் ஏராளமாகும். பெருந்தொற்றுக் காலத் தில் துப்பாக்கி விற்பனை அமோக மாக இருந்ததும் புள்ளிவிபரங்களில் தெரிய வந்துள்ளன. அந்தக் காலகட்டத்தில், அதாவது 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை யில் சுமார் 6 கோடி துப்பாக்கிகளை அமெரிக்கக் குடிமக்கள் வாங்கி யுள்ளனர். முதன்முறையாக துப்பாக்கியை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக இருந்தது. புதிதாகத் துப்பாக்கியைக் கையாள பல ருக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் கொலைகள் மற்றும் தற்கொலை கள் அதிகரித்தன. விற்பனை அதி கரித்ததே கொலைகள் அதிகரித்த தற்குக் காரணமாகச் சொல்லப்படு கிறது.
தற்போது துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கும், பல ஆண்டு களுக்கு முன்பாக துப்பாக்கிகளை வைத்திருந்ததற்கும் குறிப்பான வேறுபாடுகள் இருக்கின்றன என்று பொருளாதார மற்றும் நீதித்துறை ஆய்வாளரான ஜான் ரோமன் கூறு கிறார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “இப்போது துப்பாக்கிக்கு உரிமையாளராக இருப்பவர் வேறு ரகத்தைச் சேர்ந்த வராவார். முன்பெல்லாம் ஒரு நீள மான துப்பாக்கியைப் பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறை யோ அதை எடுத்துக் கொண்டு வேட்டைக்குச் செல்வார்கள். இப்போதோ, கைத்துப்பாக்கி, அதோடு தானாக இயங்கும் துப்பாக்கியை வைத்திருக்கிறார் கள். பெரும்பாலும் அதைக் கையோடு எடுத்துக் கொண்டு வலம் வருகிறார்கள்” என்றார். அமெரிக்காவின் கலி போர்னியா, நியூயார்க், வாஷிங்டன், அலபாமா மற்றும் ஓஹியோ ஆகிய பகுதிகளில் துப்பாக்கி விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகமான அளவில் துப்பாக்கிகள் விற்பனையானது பெரும் கவலையை அளித்ததோடு, அந்தக் காலகட்டத்தில் துப்பாக்கி யைக் கையாள்வதற்கான பயிற்சி யும் அவர்களுக்குக் கிடைக்க வில்லை. எப்படிக் கையாளுவது அல்லது எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்பதுபற்றியெல்லாம் துப்பாக்கிகளை வாங்கியவர் களுக்கு முழுமையாக தெரியாமல் போய்விட்டது.
பெருந்தொற்றும் காரணம்
தங்கள் வாழ்நாளில் இத்தகைய மரணங்களை மக்கள் பார்க்காத தால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் சமூகம் சிதைந்துவிடப் போகிறது என்று நம்பினார்கள். அனைவரின் மனதிலும் அச்சம் இருந்தது. பெரும் கவலையுடன் இருந்தனர். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் தங்கள் நாட்டிற்கு என்ன ஆகப் போகிறதோ என்ற பயத்துடன் வாழ்ந்தனர். இந்த அம்சங்கள்தான் அமெரிக்க மக்களை துப்பாக்கிக் கடைகளுக்கு ஓடிப்போய் துப்பாக்கிகளை வாங்கிக் குவிக்க வைத்தது. துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கு ஆதர வாக இருப்பவர்கள் இது போன்ற கருத்துக்களை வதந்திகளுடன் பரப் பினார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் தேவை என்று வலியுறுத்துபவர்களில் ஒருவரான நிக் சுப்லினா. முதன்முறையாகத் துப்பாக்கி களை வாங்கியவர்களில் பெரும்பா லானோர் இளைஞர்களாவர். வீடுகளில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பெண்கள், அவற்றைப் பாதுகாக்கத் தங்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பொருட்களை வேறு யாருக்கோ சேமித்து வைப்பதாக மாறிவிடும் என்று கருத்துக்களைப் பரப்பினார்கள். இதனால், முதன்முறையாகத் துப்பாக்கிகளை வாங்கியவர்களில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது.