world

img

எலான் மஸ்க் வசம் டிவிட்டர் - சி.இ.ஒ உட்பட 5 பேர் பணிநீக்கம்

டிவிட்டர் தளம் எலான் மஸ்க் வசமான சில மணி நேரங்களிலேயே தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட 5 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் முன்னணி பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், 44 பில்லியன் டாலருக்கு (ரூ.30 ஆயிரம் கோடி) டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டை தன் வசமாக்கியுள்ள எலான் மஸ்க், சில மணி நேரங்களிலேயே தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி நெட் சேகால், சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே, பொது ஆலோசகர் சீயன் எட்ஜெட், தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சோனெட் ஆகிய 5 உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.

மேலும், தனது டிவிட்டர் கணக்கின் பயோவை 'சீஃப் ட்விட்' (Chief Twit) என எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.