தென் ஆப்பிரிக்காவில் கல்வி, சுகாதாரம் மற்றும் அதன் துணைத்துறையின் ஊழியர்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகிறார்கள். 2018 ஆம் ஆண்டு மூன்றாண்டு கால உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய உடன்பாடு இதுவரையில் எட்டப்படவில்லை. தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை போராடும் ஊழியர்களுக்கு அளித்துள்ளது.