அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகா ணத்தில் பாஸ்டன் நகரத்தில் சமீபத்தில் நடந்த விழாவில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசி கேட்டுடன் இணைந்து 2022ஆம் ஆண்டிற்கான எர்த்ஷாட் (Earthshot) விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களில் பொருட்களை பொட்டலமிட பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கடற்களைச் செடிகளில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய பொரு ளைக் கண்டுபிடித்த நாட்ப்ளா (Notpla) என்ற நிறு வனமும் அடங்கும். நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றம் மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை பேரழிவுகளை குறைக்க உதவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு மில்லியன் பவுண்டு மதிப்புள்ள இந்த விருதுகள் இளவரசர் வில்லியம் அவர்களால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி 1960களில் நிலவுக்கு மனிதனை முதல்முறை யாக அனுப்ப விடுத்த மூன்ஷாட் (Moonshot challenge) சவாலை நினைவுகூரும் வகையில் இந்த விருதுகளுக்கு எர்த்ஷாட் என்று பெயர் வைக்கப்பட் டுள்ளது ஒரு பத்தாண்டிற்குள் மனிதனை நிலவில் இறக்க அப்போது உலகம் முழுவதும் மக்களும் விஞ்ஞானிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டனர். அதே போல காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்க இன்று உலக மக்கள் அனைவரும் ஒந்றுபட்டு செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளவரசர் வில்லியம் தன்னார்வத்துடன் உரு வாக்கிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் ஐந்து நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படு கிறது. பாஸ்டனில் நடந்த விழாவில் பல துறை பிரபலங்களும் கலந்துகொண்டனர். 2020இல் இவை ஏற்படுத்தப்பட்டன. “இந்த விருதுகள் மற்றும் வருங்காலத்தில் புதி தாகக் கண்டுபிடிக்கப்படும் சூழல் நலத் தீர்வுக ளுக்கு வழங்கப்படவிருக்கும் விருதுகள் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைத்து பூமியின் எதிர் காலத்தை மாற்ற உதவும்” என்று வில்லியம் கூறுகிறார்.
இயற்கைத் தீர்வு
மக்கக்கூடிய தாவரங்களின் கழிவுகளில் இருந்து குமிழ்களில் திரவங்களை பாதுகாத்துவைக்கும் முறை, உணவு வைக்கப்படும் பாத்திரங்களுக்கு பயன்படும் பூச்சு மற்றும் அழகுசாதனம் மற்றும் பாஷன் தொழிலுக்குப் பயன்படும் காகிதத்தை நாட்ப்ளா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஜஸ்டீடு என்ற உணவு வழங்கும் இணையதள நிறுவனத் திற்கு இந்நிறுவனம் ஒரு மில்லியன் உணவுப் பெட்டி களை தயாரித்து கொடுத்துள்ளது. “பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த உலகில் ஒருவரும் வாழ விரும்பமாட்டார்கள். காலம் இன்னும் கடந்து போகவில்லை. இயற்கைப் பொருட்களில் இருந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருட்களை உருவாக்கி பிளாஸ்டிக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்” என்று இந்நிறுவனத்தின் இணைத் தோற்றுநர் பியர் பாஸ்லியர் (Piierr Paslier) கூறுகிறார். 60,000 ஆண்டு பழமையான தங்களுடைய பாரம் பரிய அறிவை உலகின் மிகப்பெரிய பவளப்பாறை களான கிரேட் பேரியர் ரீஃப் பகுதி, அதைச் சுற்றி யுள்ள நிலம் மற்றும் கடற்பகுதியை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாத்துவரும் ஆஸ்திரேலிய ஆதிவாசிப் பெண்கள் குழுவிற்கு எர்த்ஷாட் விருது கிடைத்துள்ளது. இவர்கள் இது பற்றிய பயிற்சியை மற்ற 60 பெண்களுக்கு இதுவரை அளித்துள்ளனர். அறிவியல் மற்றும் கலாச்சார, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இவர்கள் பாதுகாத்து வருகின்றனர். கார்பனை உறிஞ்சி பாறைகளாக்கி நிரந்தரமாக அதை நிலத்திற்கடியில் சேகரித்துவைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள ஓமன் நிறு வனத்திற்கும் இந்த ஆண்டு எர்த்ஷாட் விருது கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் பகுதியில் இருந்து இவ்வாறு 1000 டன் கார்பனை உறிஞ்ச இந்நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.
தூய அடுப்பும் பசுமைக் குடில்களும்
ஆப்பிரிக்கா கென்யாவில் உள்ள பெண்கள் வீட்டுக் குள் ஏற்படும் காற்று மாசைக் குறைத்து பாது காப்பாக சமையல் செய்ய அவர்களுக்கு உதவும் புதிய ஸ்டவ் அடுப்பை கண்டுபிடித்த தொழில் முனை வோர் நிறுவனம் இந்த ஆண்டிற்கான எர்த்ஷாட் விருது பெற்றுள்ளது. இந்தியாவில் நீடித்த நிலை யான வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் உரு வாக்கப்பட்ட புதிய பசுமைக்குடில் வீடுகளை கண்டு பிடித்த தெலுங்கானாவைச் சேர்ந்த கெயிட்டி (Kheyti) நிறுவனத்திற்கும் எர்த்ஷாட் விருது கிடைத்துள்ளது. இந்தியாவில் சிறு குறு நில விவசாயிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பத்து கோடி ஏழை விவசாயி களுக்கு உதவி செய்வதே தங்கள் இலட்சியம் என்று கெயிட்டியின் தோற்றுநர்களில் ஒருவரும், நிறு வனத்தின் தலைமை செயல் அலுவலருமான கௌசிக் கத்த கண்டுலு கூறினார். சூழலுக்கு நட்புடைய இத்தகைய தொழில்நுட்பங் கள் பெருமளவில் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே மனிதகுலம் இன்று சந்திக்கும் காலநிலைப் பேரழிவு களில் இருந்து மீளமுடியும் என்பது உறுதி.