world

img

மன்னர் பதவியேற்புக்கு மக்கள் பணத்தை செலவழிக்காதீர்!

லண்டன், ஏப்.20- புதிய மன்னராகப் பொறுப்பேற்க விருக்கும் மூன்றாம் சார்லஸ் பதவி யேற்பு விழாவுக்கான செலவை மக்கள் பணத்தில் இருந்து செலவு செய்யக் கூடாது என்று பிரிட்டன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும் பணவீக்க உயர்வு மற்றும் வரலாறு காணாத அளவிலான விலை வாசி ஆகியவற்றால் பிரிட்டன் தள்ளா டிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய மன்னரின் பதவியேற்பு விழாவுக் கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மே 6 ஆம் தேதியன்று புதிய மன்ன ராக 74 வயதாகும் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்கவிருக்கிறார். இந்த விழா வுக்கு எவ்வளவு செலவாகும் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சி, தெருக்களில் விருந்துகள் மற்றும் ஒளிக்காட்சிகள் என்று கோடிக் கணக்கான பவுண்டுகள் செலவ ழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

பல்வேறு நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன. நடப்பாண்டின் தொடக்கத்தில், “வரி செலுத்துபவர்களின் மதிப்பைக் குறைக்கும் வகையில் எதுவும் நடக்கக்கூடாது. அவர்களின் மதிப்பு குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பரம் அல்லது அதிகப் படியான செலவுகள் எதுவும் செய்யக் கூடாது” என்று பிரிட்டன் அமைச்சர் ஆலிவர் டோடென் எச்சரித்திருந்தார். தனது இந்தக் கருத்தைத் தனது சக அமைச்சர்கள் மற்றும் மன்னர்  குடும்பம் கவனத்தில் வைத்திருப் பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் பேசிய டோடென், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி யாகும். அதனால் ஏனோதானோ என்றும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தேறி விட முடியாது” என்றும் பேசினார். வலதுசாரி ஆட்சியா ளர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எப்போதுமே மன்னர் குடும்பத்தைப் பாதுகாக்கும் பணியில் கவனமாக இருப்பார்கள். மக்களின் கருத்து எதிர்மறையாக இருக்கும் வேளையில், அக்கருத்தைப் பிரதிப லிக்கும் வகையிலும் கருத்தைச் சொல்லி வருகிறார்கள்.

மக்கள் கருத்து

யுகவ் என்ற அமைப்பு மக்களின் கருத்தைக் கேட்டறிந்தது. அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் உயரும் அத்தியா வசியப் பொருட்களின் விலை என்ற  நெருக்கடியான சூழலில் மன்னர் பதவியேற்பு விழாவுக்கு மக்கள் பணத்தை வாரியிறைக்க வேண்டாம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4 ஆயிரத்து 246 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில் வெறும் 32 விழுக்காட்டினர் மட்டுமே பதவியேற்பு விழாவுக்கு அரசு நிதியைச் செலவு செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர். இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. 18 வயது முதல் 24  வயது வரையிலானவர்களில் 62 விழுக்காட்டினர் வரிப்பணத்தைச் செல வழிக்கக்கூடாது என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள். இந்த வயதுள்ள வர்களில் வெறும் 15 விழுக்காட்டினர் மட்டுமே மக்கள் பணத்தை செலவழிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் மட்டுமே வரிப்பணத்தை செலவழிக்க ஓரளவு ஆதரவு கிடைத்திருக்கிறது. அவர்க ளில் 43 விழுக்காட்டினர் ஆதரவும், 44 விழுக்காட்டினர் எதிர்ப்பும் தெரிவித்தி ருக்கிறார்கள். மன்னர் பொறுப்பே தேவை யில்லை என்று கருதும் குழு, பதவி யேற்பு விழாவை பெரும் பொருட் செலவு செய்வதற்குக் கடும் எதிர்ப்பு  தெரிவித்திருக்கிறது. வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறிக் கொண்டி ருக்கும் மக்களின் கன்னத்தில் அறை யும் விட்டது போல் இருக்கிறது என்று அக்குழுவின் தலைவர்களின் ஒருவரான கிரகாம் ஸ்மித் விமர்ச னம் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த பிரிட்டன், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு, வேலை யின்மை உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில், இது போன்ற ஆடம் பரச் செலவு செய்யாதீர்கள் என்று மன்னராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்ப வர்கள் கோரி வருகிறார்கள். மே 6 ஆம் தேதியன்று மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொள்ளவிருப் பதால், அதே நாளில் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.