இந்தோனேசிய குவாரி விபத்து பலி உயர்வு
இந்தோனேசியாவில் சுண்ணாம்புக் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தின் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மே 30 அன்று ஏற்பட்ட விபத்தில் முதல் கட்டமாக 6 பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். தொடர்ந்து உயிரிழந்த 19 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து 4 ஆவது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் இத்தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஆதரவாளர்கள் மீது தீ வைப்பு
காசாவில் ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை நினைவுகூரும் வகையில்கூடி இருந்தவர்கள் மீது தீ வைத்ததால் அமெரிக்காவில் பதற்றம் உருவானது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் ஒரு நபர் பெட்ரோல் போன்ற எரிபொருள் திரவத்தை வீசி அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதனால் ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன் றதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, உளவுத்துறை தகவல்படி தேடுதல் வேட்டை துவங்கப்பட்டது. அப்போது காவல்துறைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு நிரந்தரப் போர் நிறுத் தத்திற்கான அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் போர் நிறுத்தத் திற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் துவங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதிப்படுத்தி யுள்ளது. காசாவில் “மனிதாபிமானப் பேரழி வை” முடிவுக்குக் கொண்டு வருவது, நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது, இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியிலிருந்து முழு மையாக வெளியேற வேண்டும். இவற்றுடன் நிரந்தரப் போர் நிறுத்தம் அமல்படுத்துவதே நோக்கம் என தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை
ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் இலங்கையில் செயற்கைக்கோள் இணைய சேவைகள் துவங்கும் தருவாயில் உள்ளன. இதற்கான அரசு செயல்முறைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ள தரவுகள், தகவல்கள், கட்டுப்பாடுகளை ஒரே இடத்தில் எளிதாகப் பார்த்து நிர்வகிக்க உதவும் டாஷ்போர்டு (மென்பொருள் கருவி) கிடைத்தவுடன் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய அமெரிக்கா : பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை
பெய்ஜிங்,ஜூன் 2- அமெரிக்காவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மிக மோசமான முறையில் மீறிவிட்டது என சீன வர்த்தக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனாவின் நலன்கள் பாதிக்கப்படும் நிலையில் சொந்த நாட்டின் நலன்களைப் பாது காக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமெ ரிக்காவை சீனா எச்சரித்துள்ளது. மே 12 அன்று ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்கா விற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந் தத்தின்படி, சீனா மீது அமெரிக்கா விதித்த அதி கப்படியான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டது. சீனாவும் அமெரிக்கா மீதான வரிகளை நிறுத்தி வைத்தது. இறக்குமதி களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரி கட்டுப்பாடு அல்லாத உறவு களில் அமெரிக்கா தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றது. உதாரணமாக சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு சிப்கள் பயன் படுத்துவதை தடுக்கும் வகையிலான உலகளா விய தடைகள், சீன நிறுவனங்களுக்கு சிப் வடிவ மைப்பு மென்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தியது, மற்றும் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது என பல சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் சீனா, அமெரிக்காவின் நல னுக்கு எதிராகச் செயல்படுகிறது. வர்த்தக ஒப் பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது. இதற்காக சீனாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்கா தனது “தவறான நடவடிக்கைகளை” உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். சீனாவுக்கு எதி ரான பாகுபாட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், ஜெனீவாவில் நடந்த உயர் மட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் நடைமுறை யில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்ச ரித்துள்ளது.