ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா நோக்கி கடந்த 21-ஆம் தேதி ரோமானிய நிறு வனமான லெஜண்ட் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏ340 பயணிகள் விமா னம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரா ன்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே உள்ள வத்ரி விமான நிலையத்தில் தரை யிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்த பயணிகளில் 303 பேர் இந்தி யர்கள் என்ற நிலையில், வத்ரியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, விமானத்தில் ஆள் கடத்தல் நடந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு மறைமுக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பயணிகளை கீழே இறக்கி பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களின் ஆவணங்களை பரிசோ தித்தனர். அதில் 11 சிறுவர்கள் பெற் றோர் அல்லது உறவினர் இன்றி விமா னத்தில் பயணித்திருப்பது கண்டறி யப்பட்டது. அதோடு 5 சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் பிரான்சில் தங்கி விடப் போவதாகக் கூறி அடைக்கலம் கேட்டனர். இதனால் அதிகாரிகள் விசா ரணையைத் தீவிரப்படுத்தி, பயணி கள் அனைவரும் பிரான்ஸ் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையில் ஆள் கடத்தல் சந்தே கம் நிவர்த்தி ஆனதையடுத்து, விமா னம் இந்தியா நோக்கி புறப்பட நீதிபதி கள் அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து இந்திய பயணி களுடன் லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமா னம் செவ்வாயன்று காலை மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் 276 இந்திய பய ணிகள் மட்டுமே மும்பைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 27 பேர் பிரான்சிலேயே தங்கிவிட்டனர் என்றும், அவர்கள் அங்கேயே அடைக்கலம் கோரியதாக பிரான்ஸ் நிர்வாகம் இந்திய தூதரகத்திடம் தெரி வித்துள்ளது.
சிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணை
மும்மை வந்த பயணிகளிடம் மத் திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐ எஸ்எப்) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்குச் செல்லும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளி யேறும் போது, ஊடகவியலாளர் களின் கேள்விகளைத் தவிர்க்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஆள்கடத்தல் சந்தேக விமா னத்தில் பயணித்தவர்களில் தமிழ் பேசக்கூடியவர்கள் இருந்தனர் என் றும் தகவல் வெளியாகியுள்ளது.