world

img

800 பழங்குடி மக்கள் படுகொலை?

பிரேசிலியா, ஜூலை 29- பிரேசிலில் வலதுசாரி ஜனாதி பதி ஜெய்ர் போல்சானரோவின் ஆட்சியின்போது சுமார் 800 பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசில் பழங்குடியினர் உதவி மையம் வெளியிட்டுள்ள ஆய்வ றிக்கையில்தான் இது அம்பல மாகியிருக்கிறது. 2019 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31 வரையில் போலசானரோ ஜனாதிபதியாக இருந்தார். அவருக்கு முன்பு ஆட்சி யில் இருந்த இடதுசாரி ஜனாதிபதி களின் முற்போக்கு சீர்திருத்தங்க ளைத் திரும்பப் பெற்றதோடு, பழங்குடி மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அதிகரித்தன. அமேசான் காடுகள் அழிப்பை விரைவுபடுத்தியதில் இவருக்கு முக்கியமான பங்கு இருந்தது. பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருந்த போதிலும், அவர்களின் மரணங்க ளுக்கான காரணங்கள் மறைக்கப் பட்டன. மாகாண வாரியாக பழங்கு டியினர் உதவி மையத்தால் ஆய்வு கள் நடத்தப்பட்டதால், கூடுதல் விபரங்கள் தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளன.

கொலை செய் யப்பட்டிருப்பார்கள் என்று இந்த மையம் சேகரித்துத் தொகுத்த பட்டியலில் 795 பேரின் பெயர் இடம் பெற்றிருக்கின்றன. பழங்குடி அமைப்புகளும், கிறித்தவ மத குருமார்களும் பங்கேற்ற கூட்டமொன்றில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பழங்குடி அமைப்பின் தலைவர்க ளில் ஒருவரான ரோக் பலோஸ்சி, மிகவும் கொடூரமான முறையில் வன்முறை வெறியாட்டங்கள் நடந் துள்ளன என்று கடுமையான கண்ட னத்தைத் தெரிவித்திருக்கிறார். பழங்குடி மக்கள் மீதான வன்முறை க்கு கிறித்தவ மத குருமார்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யானோமாமி என்ற பழங்குடி இனத்தவர் ரோராய்மா, அமேசானஸ் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் அதிகமாக வசித்து வருகிறார்கள். இதில் ரோராய்மா மாகாணத்தில்தான் அதி கமான அளவில் பழங்குடி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 208 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அமே சானஸ் மாகாணத்தில் 168 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 146 பேர் மடோ கிராஸ்ஸோ மாகா ணத்தில் கொலையாகியிருக்கி றார்கள்.

தற்கொலைகளும் அதிகம்

இந்த மூன்று மாகாணங்களில் தற்கொலைகளும் பெரும் அளவில் நிகழ்ந்துள்ளன. இந்தத் தற்கொலை களுக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். ரோராய்மா, அமேசானஸ் மற்றும் மடோ கிராஸ்ஸோ ஆகிய மூன்று மாகாணங்களில் மட்டும் 535 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகி வருகிறது என்ற எண்ணம் பரவலாக பழங்குடி மக்களிடம் பரவியிருக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையைத் தயார் செய்தவர்களில் ஒருவரான ராபர்ட்டோ அன்டோனியோ லிப்காட், “மற்ற ஆய்வறிக்கைக ளுக்கும், நாங்கள் தயாரித் துள்ளதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. இது வக்கிர உணர்வுடன் நான்கு ஆண்டுகள் கொடூரமாக நடந்த தாக்குதல்களை அம்பலப் படுத்துவதாக உள்ளது. அதனால் தான் நாங்கள் நான்கு ஆண்டு கள் நடந்த நிகழ்வுகளைத் தொ குப்பதற்கான பணியைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எடுத்திருக்கிறோம்” என்கிறார்.