ஆகஸ்ட் 22 முதல் 24 வரை ஜொகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.இம்மாநாட்டில் புதிய உலக ஒழுங்கமைப்பை கட்டமைப்பது; டால ருக்கு மாற்றாக பொது நாணயம் கொண்டுவருவது குறித்தான விவாதங்கள் முக்கியத்துவம் வகிக்கும் எனத் தெரிகிறது. 2003ஆம் ஆண்டு பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தலை வர்கள் மெக்சிகோவில் சந்தித்து மருந்து, வர்த்தகம் குறித்து விவாதித்த னர். பிரேசில் மற்றும் தென்னாப்பி ரிக்கா நாடுகளில் எச்.ஐ.வி மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு மலிவு விலை மருந்துகள் தேவைப்பட்டன.அன்று எச்.ஐ.வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல்வேறு மருந்து களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்ததால் வர்த்தக ஒப்பந்த த்தை நோக்கிச் செல்ல முயன்ற போது உலக வர்த்தக அமைப்பு திணித்தி ருந்த அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்க ளின் காரணத்தால் இந்நாடுகளுக்குள் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப் பட்டது.
இந்த சந்திப்புக்கு சில மாதங்கள் முன்பு அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தகப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் தெளிவுபடுத்தவும் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகள் உள்ளடக்கிய ‘IBSA’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இந்த ஏழை நாடுகள், தங்கள் விவசாய மானியங்களை நிறுத்த வேண்டும் என்று மேற்குலக ஏகாதிபத்திய நாடு களின் அராஜகமான உத்தரவுகளை எதிர்கொள்ளவும் வேண்டியிருந்தது. இத்தகைய சவால்களை எதிர் கொள்ளும் விவாதங்களின் பின்னணி யில் ‘தெற்குலக நாடுகளின் ஒத்து ழைப்பு’ (South -South Cooperation) என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றது. ‘தெற்குலக நாடுகளின் ஒத்துழைப்பு’ மீதான ஆர்வம் 1940கள் முதல் உள்ளது. ஐ.நா பொருளாதார மற்றும் சமூகசபையின் முதல் தொழில் நுட்ப உதவி திட்டமானது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் புதிதாக விடுதலை பெற்ற காலனித்துவ நாடுகளுக்கு இடையே வர்த்தகத்திற்கு உதவியது. இதே நோக்கத்துடன் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு ‘IBSA’ உருவாக்கப்பட்டுள்ளது என 2004 டிசம்பர் 19 அன்று தெற்கு உலக நாடு களின் ஒத்துழைப்புக்கான ஐ.நா சபை தினத்தில் நினைவுகூரப்பட்டது. இதே காலத்தில் ஐநா சபை தெற்கு லக நாடுகளின் ஒத்துழைப்பிற்கான சிறப்புப் பிரிவை 1988 ஆம் ஆண்டு ‘வளரும்’ நாடுகளுக்கிடையிலான வர்த்தக விருப்பங்களுக்கான உலக ளாவிய அமைப்பு ஒப்பந்தத்தின், அடிப் படையில் உருவாக்கியது.இவ்வொப்பந்தத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா வைச் சேர்ந்த 42 உறுப்பு நாடுகளும் அடங்கும்.
தெற்குலக நாடுகளுக்கு இடையே யான வர்த்தகத்தை அதிகரிப்ப தற்கான இந்த நீண்ட வரலாறுதான் 2009ஆம் ஆண்டு ‘பிரிக்ஸ்’ (BRICS) துவங்க அடிப்படையாக அமைந்தது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய தெற்கு உலகின் வலுவான நாடுகள் இணைந்த பிரிக்ஸ் - முதல் உச்சி மாநாடு 2011 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்றது.அதன் பிறகு பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய வளர்ச்சி வங்கி (NDB), தற்செயல் இருப்பு ஏற்பாடு (CRA) ஆகியவற்றை 2014இல் நிறுவின. 2000 இல் இருந்தே பிரிக்ஸ் நாடு கள் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகின்றன.இந்த வளர்ச்சி 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% ஆக வளர்ந்து தொடர்ந்து உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது.
பொருளாதார உதவி கூட்டமைப்பின் பலம்
உலக மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் இந்த நாடுகளில் வசிப்பது இக்கூட்டமைப்பின் கூடு தல் அம்சமாக உள்ளது. (அதிக மக்கள் தொகை அதிக உற்பத்தி சக்தியை குறிக்கிறது ) உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பு களின் கொள்கை நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதிலும் வர்த்தகம், காலநிலை மாற்றம்,நிலையான வளர்ச்சி தொடர்பான சர்வதேச பிரச்ச னைகளுக்கான பேச்சுவார்த்தைகளில் இணைந்து பேசுவது உலக அரங்கில் முத்திரை பதித்துள்ளது.
பொருளாதார தாக்கம்
உலகப் பொருளாதாரத்தின் ஒற்றை ஆதிக்க சக்திகளுக்கு சவால் விடுவதோடு தற்போதுள்ள உலகளா விய நிதிக் கட்டமைப்பைக் கடுமை யாக விமர்சித்து சமமான பிரதிநிதித் துவ அமைப்பிற்கு பிரிக்ஸ் அழைப்பு விடுக்கிறது. பிரிக்ஸ் கூட்டணியின் எழுச்சி உலக ளாவிய அமெரிக்க ஆதிக்கத்தை மாற்றி பொருளாதார ரீதியாக வளர்ந்து உலகப் பொருளாதாரத்தை கட்டமைக்கும் ஆற்றலைக் பெற்று வருகிறது.இருப்பினும் சமத்துவ மின்மை, ஊழல் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க வேண்டும். இந்நிலையில், தற்போது நடை பெறவுள்ள மாநாட்டில் டாலரற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேற்கொள்ள ஒரு பொது நாணயத்தை உருவாக்க ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டாலர் ஆதிக்கத்தை தகர்க்கும் முயற்சி களின் ஒரு படியாக இருக்கலாம். டாலரைப் பயன்படுத்தாத புதிய வர்த்தக வழிமுறைகளை கையாளும் சீனா-ரஷ்யா, சீனா-பிரேசில், ரஷ்யா-இந்தியா அதை எவ்வாறு செயல்படுத்தும்; இந்த கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவார்களா என்பன போன்ற கேள்விகளுக்கு உச்சி மாநாடு பதில் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சேது சிவன்