டோக்கியோ, ஜூன் 21- ஜப்பான் மண்ணில் முகாமடித் திருக்கும் அமெரிக்கப் படை வீரர்கள் செய்யும் குற்றங்களுக்காக வெறும் 10 விழுக்காடு மட்டுமே நீதிமன்றத் தில் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதில் இருந்தே ஜப்பானில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப் பட்டுள்ளன. அவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிப் பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. 54 ஆயி ரம் வரையில் அமெரிக்கப் படை வீரர்கள் இருப்பதாகக் கூறப்படு கிறது. இவர்களோடு, இவர்களின் குடும்பத்தினரும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். படைவீரர்களில் பெரும்பாலானோர் ஒகினாவா தீவுகளில் நிறுத்தப்பட்டிருக் கிறார்கள். இந்த வீரர்கள் ஜப்பானின் சட்டங்களுக்குக் கீழ்வரமாட்டார்கள். இவர்கள் செய்யும் குற்றங்கள் அமெரிக்கச் சட்டங்களின் அடிப்ப டையில் விசாரிக்கப்படும் என்பது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உடன்பாட்டில் உள்ள அம்ச மாகும். ஆனால், பெரும்பாலும் குற் றங்கள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றன. 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் செய்த குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே நீதிமன்றங்களில் வழக்காக மாறி யுள்ளன. 90 விழுக்காடு குற்றங்கள் மீது எந்தவித நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டவற்றிலும் தண்ட னைகள் வழங்கப்படவில்லை.
இந்த விபரங்கள் ஜப்பான் அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளி விபரங்களாகும். ஜப்பான் அமைதிக் குழு இந்த விபரங்களை வெளி யிட்டிருக்கிறது. ஜப்பானின் நீதித் துறையிடமிருந்து பெறப்பட்ட இந்த விபரங்களின்படி 9.6 விழுக்காடு குற்றங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜப்பான் குடி மக்கள் செய்யும் குற்றங்களில் 30 விழுக்காட்டிற்கு மேற்பட்டவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதி மன்றங்கள் முன்னால் நிறுத்தப்படு கிறார்கள். அமெரிக்கப் படை வீரர்களுக்கு சாதகமாக சட்டங்கள் வளைந்து நிற்கின்றன என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் பத்து குற்றங் களின் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டுள்ளன. அவர்கள் செய்த குற்றங்களில் 94 சம்பவங்கள் சட்டங்களுக்குள் வரவில்லை. அந்தக் குற்றங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. இத்தனைக்கும் விலக்களிக்கப்பட்ட குற்றங்கள் சாதாரணமானவை இல்லை. பாலியல் ரீதியான தாக்கு தல்கள், வன்புணர்வுகள், வன்புணர்வு செய்து கொலை செய்தல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டல்கள் மற்றும் மோசடிகள் ஆகிய குற்றங்கள் மீது வழக்கு எதுவுமே பதிவு செய்யப்பட வில்லை. விபத்து ஏற்படுத்தும் 155 சம் பவங்களில் பலர் கொல்லப்பட்டுள் ளார்கள் மற்றும் பலர் காயமடைந் தனர். ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் பட்டன. ஜப்பான்-அமெரிக்கப் படை கள் உடன்பாட்டின்படி, அமெரிக்க படை வீரர்கள் “பணியில் இருக்கும் போது” செய்யும் குற்றங்கள் அனை த்தும் அமெரிக்க நிர்வாகத்தால் மட்டுமே விசாரிக்கப்படும். இத னால் பெரும்பாலான குற்றங்கள், அந்த வீரர்கள் பணியில் இருக்கும் போது செய்ததாகவே பதிவு செய்யப்படுகின்றன.
மக்கள் எதிர்ப்பு
அமெரிக்கப் படைகளின் இருப்பு க்கு ஜப்பான் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பெரும் பாலான வீரர்கள் ஒகினாவா மாகா ணத்தில்தான் முகாமிட்டுள்ளனர். அந்த மாகாண மக்கள் தொடர்ந்து அமெரிக்கப் படைகளின் முகாம் களுக்கு எதிராக வாக்களித்து வரு கிறார்கள். முகாம்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மற்றும் குரல் எழுப்புபவர்கள்தான் இந்த மாகாணத் தின் ஆளுநராக வெற்றி பெற முடியும் என்ற நிலைமை நிலவுகிறது. மக்க ளின் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப் படாமல் அமெரிக்கப் படைகளுக்கு கூடுதல் முகாம்கள் அமைப்பது பற்றி ஜப்பான் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.