ஜோகன்னஸ் பர்க்: முதலாளித் துவ லாபவெறி நடவடிக்கை களால் உருவாக்கப்பட்ட காலநிலை பேரழி வுகளால் கடந்த ஆண்டு மட்டும் ஆப்பிரிக்க கண்டத்தின் துணை -சஹாராவில் இருபது லட்சம் குழந் தைகள் நாடுகளுக்குள் இடம்பெயர்ந் துள்ளனர் என, “குழந்தைகளைப் பாது காப்போம்” (Save The Children) என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரி வித்துள்ளது. இடம்பெயர்ந்த குழந்தைகளில் பலர் குறிப்பிட்ட இடத்தில் முறையாக வாழ முடியாமல் பல முறை இடப்பெயர் வுகளை எதிர்கொண்டுள்ளனர்; முகாம்களில் கூட்டமாகவும் தற்காலிக ஏற்பாடுகளிலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக குழந்தைகள் தங்கள் வீடுகளை இழக்கும் போது சுகாதா ரம், கல்வி, உணவு மற்றும் பாதுகாப்பு என அனைத்தையும் இழக்கிறார்கள். நைரோபியில் தற்போது நடை பெற்று வரும் ஆப்பிரிக்கா காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள தலை வர்கள், காலநிலை நெருக்கடி குழந்தைகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதையும், அழிந்து வரும் குழந்தைகளின் தேவைகள் மற்றும் உரிமைகளு க்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டி யுள்ளதையும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புவதாக கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா பிராந்திய ‘சேவ் தி சில்ட்ரன்ஸ்’ அமைப்பிற்கான செய்தித் தொடர்பாளர் கிஜாலா ஷகோ கூறினார். காலநிலை மாற்றத்தால் சோமாலி யாவில் ஐந்து முறை மழைக்காலங்க ளில் மழை பொழியவில்லை. இது, சுமார் 66 லட்சம் மக்களை தீவிர வறுமையில் தள்ளியது.காலநிலை பேரழிவுகளால் 2022 ஆம் ஆண்டில் துணை-சஹா ரா ஆப்பிரிக்காவில் ஆண்டு முழுவ தும் நாடுகளுக்குள் இடப்பெயர்வுகள் நடக்கும் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 2021 இல் 21 லட்சம் மக்கள் இடம் பெயர்ந் தனர்; இது 2022 ஆம் ஆண்டில் 74 லட்சம் பேராக உயர்ந்து விட்டது. காலநிலை மாற்றத்திற்குக் காரண மான பசுமை வாயு உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வெளியேற்றப்படும் அளவை விட மிகக் குறைந்த அளவே வெளியேறும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்த இடப்பெயர்விற்கு மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய நடவடிக்கை களும் முக்கிய காரணமாகும். எல் நினோ தீவிர வானிலை நிகழ்வு களை ஏற்படுத்துகிறது. புவி வெப்ப நிலையும் உயர்ந்துள்ளது. எனவே 2023 ஆம் ஆண்டு மக்களின் இடப் பெயர்வு எண்ணிக்கை மேலும் அதி கரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.